Sunday, March 25, 2018

மணி சார் சொம்புகளும், ‘செக்கச் சிவந்த வேலை’யும்

ஒரு கதையின் முடிவானது வாசகனின் சிந்தனைக்கான திறப்பை உருவாக்க வேண்டும் என்பது பரவலான கருத்தாக்கம். ஆண்டன் செக்காவின்வான்காவில் தொடங்கி, சுஜாதாவின்வானத்தில் ஒரு மௌனத் தாரகைவரைஓப்பன்-எண்டட்சிறுகதைகளுக்கான உதாரணங்களாகக் கூற முடியும். ஒரு குறிப்பிட்ட நிகழ்வு சார்ந்த முற்றுப்பெறாத கண்ணிகளாக இவை வாசகர்களைஅதன் பிறகு என்னவாயிருக்கும்?” என்று சிந்திக்கத் தூண்டுபவை.

சில நேரங்களில் எழுத்தாளர்களே மனத்தில் நினைக்காத சில தேற்றங்கள் வாசகர்களின் சிந்தனை அலைகளால் தோற்றம் பெரும். இன்றைய இணைய உலகில்ஃபேன் தியரிஎன்று சொல்லப்படும் வகையறாக்கள் இவை. ‘ஃபேன் தியரிக்கள் ஒரு இங்கிதத்துடன் இருப்பதுதான் பொதுவான இயல்பு, அல்லது நகைப்புக்குரியதாக இருக்கும். ஆனால், நம் தமிழ்த்திரையுலகின் முக்கியமான இயக்குனராகப் போற்றப்படும் மணிரத்னம் () மணி சாரின் திரைப்படங்கள் குறித்தான அவரது தொண்டர்கள்/பக்தாள்களின் கருத்தாக்கங்கள்அதுக்கும் மேலரகம். தெரியாத்தனமாக கேமராவை ஒரு இடத்தில் வைத்துப் படம்பிடிக்கப்படும் ஒரு காட்சி கூடஅது மணி சாரால தான் அப்டி யோசிக்க முடியும். ஹீ ஹேஸ் ட்ரைட் டூ கேப்ச்யூர்…” என்று புகழப்படுகிற இடத்தில் அவர் வைக்கப்படுள்ளதால் தான், ‘காற்று வெளியிடைபோன்ற குப்பைகளை எடுத்துவிட்டு அவரால் இன்றும் திரையுலகில் வண்டி ஓட்ட முடிகிறது (மணிரத்னம் ஒரு நல்ல இயக்குன்ரர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை; ஆனால் அவர்தான் தலைசிறந்தவர் என்று சொல்வதை விட முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது).

இப்படி மணி சாரைப் புகழ்ந்து, போற்றி, வணங்கி, வழிபட்டு, ஆராதித்து, பூஜித்து, தெய்வமாக மதிக்கும் ஒரு விசிறிக்கு மூளையில் சில குழப்பங்கள் ஏற்படுகின்றன. மணி சாரின் காவியங்களை மட்டுமே பார்த்துப் பழகிப் புளகாங்கிதம் அடைந்த அவர், ‘வேலைக்காரன்திரைப்படத்தைப் பார்க்கச் செல்கிறார். அவரது அனுபவங்களும், அனாலிஸிஸுமே இனிவரும் பத்திகள்.

——

படம் பாக்கப் போனேன்டா அம்பி. ஒரே கூச்சலும், விசிலும், சத்தமுமாத் தியேட்டர்ல உக்கார முடியலை. டீசன்ஸி தெரியாத ஆடியன்ஸா இருக்கா அவா எல்லாரும். ஆனா நல்ல வேளை நம்ம பரத்வாஜ் ரங்கன் இருந்தார். அவர்கூட உக்காந்து படத்தைப் பாத்துட்டேன்.

(1) ‘நாயகன்’கள்: என்னத்துக்கு இப்போ சிவகார்த்திகேயனும், ஃபஹத் ஃபாசிலும் நடிக்கணும்? இருக்கவே இருக்கா நம்ம மாதவனும், அரவிந்த சாமியும். ஒண்ணும் சொல்றதுக்கில்லை. என்னத்தையோ கண்றாவியா எடுத்து வெச்சுருக்கான் இந்த மோகன் ராஜா.

(2) தலைப்பு: எதுக்கு இப்டி ‘வேலைக்காரன்’னு லோக்கலாப் பேரு வெச்சுருக்கான்னே தெரியலை. படம்தான் கம்யூனிஸம் பேசறதோல்லியோ? அழகாக் கவித்துவமாசெக்கச் சிவந்த வேலைன்னு வெச்சுருக்கலாம். செவப்பு தானே எப்புடியும் அவாளோட கலர்! ஹ்ம்அதெல்லாம் இந்த மோகன் ராஜா சண்டாளனுக்கு எங்க தெரியப் போறது?

(3) வசனங்கள்: நீளம், நீளமாப் பேசிண்டே இருக்கா, “உலகத்தின் மிகச் சிறந்த சொல், ‘செயல்’”ன்னு. “சிறந்தது செயல்”ன்னு சின்னதா முடிச்சிருக்கலாம். டையலாக்கே எழுதத் தெரியலை இவாளுக்கு. சுஹாசினி மேடம் பெருசு பெருசா எழுதினாலும் எப்டி ஒரு லிட்டெரரி வேல்யூ இருக்கும்! இங்க அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எதோ எழுதி வெச்சுருக்கான்.

(4) பாடல்கள்: எதுக்கு மூணரை நிமிஷத்துக்குப் பாட்டு ஓடறது? அதுவும் அந்த மாதிரி மூணு பாட்டு வெச்சுருக்கான். ஒரே பாட்டை மட்டும் வெச்சு அதையே பிச்சுப் பிச்சுப் படம் முழுக்க அங்கங்க இன்க்லூட் பண்ணிருக்கலாம். அதுக்கெல்லாம் உலக சினிமா அறிவு வேணும், ஒரு ரசனை வேணும். எல்லாரும் மணி சார் ஆயிட முடியுமா? பாட்டுக்கு நடுவுல பேசிண்டே இருக்கணும். அப்போதான் இயல், இசை, நாடகம்ன்னு எல்லாத்தையும் ஸ்க்ரீன்ல ஒரே நேரத்துல காமிக்க முடியும். அந்த ஸ்ட்ராட்டெஜி எல்லாம் இந்த லோக்கல் பய மோகன் ராஜாவுக்கு எங்க தெரியும்?

(5) லொக்கேஷன்: படத்துல ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ பாட்டுல மட்டும்தான் ரயில்வே ஸ்டேஷனே வருது. இவா படம் எடுத்துருக்கற கம்யூனிட்டியச் சுத்தி எத்தனை ரயில்வே ஸ்டேஷன் இருக்கு? வாஷர்மேன்பேட், சென்ட்ரல் அதெல்லாம். அங்க போயிட்டு ஒரு மூணு சீன் எடுத்துருக்கலாம். தட் வுட் ஹேவ் ஆடட் மோர் வேல்யூ டு த மூவி வாட்சிங் எக்ஸ்பீரியன்ஸ். பிகாஸ், ரயில்வே ஸ்டேஷன்ல எல்லாம் போர்ட்டர்ஸ் இருப்பாளோன்னோ? அவா எல்லாரும் செவப்பு ட்ரெஸ் தான் போட்டுண்டிருப்பா. அப்டியே கேமராவ அங்க ஃபோக்கஸ் பண்ணி கம்யூனிஸம்ங்கற ஐடியாலஜியக் கன்வே பண்ணிருக்கலாம். ரயில்வே ஸ்டேஷன் இல்லாத படம் எப்டி ஒரு க்வாலிட்டியக் குடுக்க முடியும்? இம்பாசிபிள்!

(6) தியரி: மோகன் ராஜா மணி சாரோட டெக்னிக்ஸ் எல்லாம் நெறைய அப்ஸார்ப் பண்ணிருக்கார். அதுனாலதான் இந்தப் படம் ஓரளவுக்குப் பாக்கற மாதிரி இருக்கு.  அஃப் கோர்ஸ், மணி சாரோட இன்ஸ்பிரேஷன் இல்லாம உலக சினிமால யாருமே படம் எடுக்க முடியாது. நாம இதெல்லாம் சொன்னா ஒத்துக்க மாட்டா. சோ, நான் என்னோட தியரியச் சொல்லிடறேன்.

படத்தோட ஸ்டார்ட்ல சிவகார்த்திகேயன் ஒரு ரேடியோ சேனல் ஆரம்பிக்கறார். அது மாடில இருக்குற ஒரு ரூம்ல செட்டப் எல்லாம் பண்ணி வெச்சுட்றார். ஆனா, ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ பாட்டுக்கு டேன்ஸ் ஆட்றதுக்குக் கீழ வர்றார். சோ, மேல இருந்து கீழ எறங்குற ஒரு ‘சைனுசாயிடல் கேர்வ்’ ஆரம்பிக்கறது இங்கதான். இது ஒரு மெட்டஃபர். அதாவது லோக்கல் ஆடியன்ஸ்க்குப் புரியுற மாதிரி சொல்லணும்னா ‘குறியீடு’.

அந்தப் பாட்டுல ‘தக்காளி’ன்னு ஒரு வார்த்தை வருது. அது ஒரு மைண்ட்ப்ளோயிங் தாட் ப்ராஸஸ். என்னன்னு நான் எக்ஸ்ப்ளெய்ன் பண்றேன். ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல், தக்காளி என்ன கலர்ல இருக்கு? செவப்பு. அதாவது, தக்காளி இஸ் ய சிம்பல் ஆஃப் கம்யூனிஸம். அதே போல, தக்காளியோட வெலை எப்புடி இருக்கு? ஏறி, எறங்கிண்டே இருக்கோல்லியோ? அந்த மாதிரி இந்த வேலைக்காராளோட வாழ்க்கை ஒரு ஸ்டெபிலிட்டி இல்லாம இருக்குன்னு சொல்ல வரா. இதுவும் அந்த ‘சைனுசாயிடல் கேர்வ்’ ரெஃபெரன்ஸ் தான்.

இதோட கண்டின்யுவேஷன் அடுத்த எல்லாப் பாட்டுலயும் தெரியறது. ‘இறைவா’ சாங்ல நயன்தாராவோட காஸ்ட்யூம் கலர யாராவது நோட் பண்ணேளா? செவப்பு. அகெய்ன் ய கம்யூனிஸம் ரெஃபெரன்ஸ். அதுல பாத்தேள்னா ‘எரிமலையிலும் நீராடலாம்’ன்னு ஒரு லைன் வருது. இதுவும் ஒரு மெட்டஃபர். எரிமலை காவிக்கலர்ல இருக்கும்; நீர் நீலக்கலர்ல இருக்கும். அதாவது, ஹிந்துத்துவாவையும், ஸப்ரெஸ்ட் பீப்புளையும் கன்வேர்ஜ் பண்ற பாயிண்ட் அதுதான். இதுவும் ஒரு கம்யூனிஸ்ட் தாட் ப்ராஸஸ்ன்னு வெச்சுக்கோங்கோளேன்.

‘எழு வேலைக்காரா’ பாட்டுல கூட பாத்தேள்னா, கம்யூனிஸ்ட் கொடியெல்லாம் வெச்சுண்டு ஆடிண்டிருக்கா எல்லாரும். சோ, படத்தோட நேரேஷன் ஒரு ஸீம்லெஸ்ஸாப் போறது. இப்போ இந்தப் பாட்டுல சில பெக்யூளியாரிட்டிஸ் எல்லாம் நாம பாக்க வேண்டியிருக்கு. “ஓயாதே, தேயாதே, சாயாதே”, “ஆறாதே, சோராதே, வீழாதே”ன்னு ரெண்டு லைன் வருதோன்னோ அந்தப் பாட்டுல? அதுல கேர்ஃபுல்லாக் கவனிச்சேள்ன்னா “சாயாதே” அண்ட் “வீழாதே” ரெண்டு வார்த்தைலயும் கரெஸ்பாண்டிங்கா இருக்குற ஸ்வரங்கள் வந்து அஸெண்டிங்கா இருக்கும். அதுல என்ன சொல்ல வரான்னா, லேபரர்ஸோட ஒரு ரெவல்யூஷனை, ஒரு அப்ரைஸ் அகெய்ன்ஸ்ட் த கேப்பிடலிஸ்ட்ஸை எக்ஸ்ப்ளெய்ன் பண்றா.

இது எல்லாத்தையும் வெச்சுப் பாக்கும்போது மணி சார் அளவுக்கு யாராலயும் படம் எடுக்க முடியாதுங்கறது மறுபடியும் ப்ரூவ் ஆயிருக்கு. இருந்தாலும், நம்ம மணி சாரோட இன்ஸ்பிரேஷன்ல படம் எடுத்த மோகன் ராஜா இன்னும் கொஞ்சம் ‘கடல்’, ‘காற்று வெளியிடை’ எல்லாம் ரிப்பீட்டடாப் பாத்தார்னா ஒரு க்ளியரான விஷனோட அவரால படம் பண்ண முடியும்னு தோண்றது.


——