Monday, September 27, 2021

The Language of Confused Internalizations

Fifty hours ago

When I opened my keyboard kit, Kanavey Kanavey - one of the most melancholic songs of the last decade - should have ideally been the last thing that came to my mind. It was a Friday, and classes for the day had ended. When I unpacked the bag, set up the arrangement, and plugged the adapter, I had a set of songs in mind that I wanted to practice. And, Kanavey Kanavey was NOT on that list, primarily because it was intense and I had decided to keep the session light. However, the only song I ended up trying out and recording was the one I did not think about in the first place, and something that was at the opposite end of the emotional spectrum, relative to my state of mind at that time.

Thousand hours ago

I was frustrated because of the now-normalized pressure of the first few weeks of B-school life. Naturally, while climbing the stairs to reach the room where the musical weaponry were kept, I had firmly zeroed in on quite a few tracks that would not require me to strain my throat and scale highs, and were soothing and calming in nature. Quite (un)expectedly, the song I ended up recording during that instance was Nallai Allai, a song that has considerable high octave notes - something I was totally not ready to attempt. Nevertheless, Nallai Allai - the umpteenth recording  of it - was the only fruitful recording at the end of that session.

*****

Oftentimes, I end up trying to fathom to what extent music can influence me. If I wanted a generally peaceful vibe, something that definitely does not warrant a melancholic track potent enough to create internal turbulence, Kanavey Kanavey was not the option. Which made/makes me wonder, "What exactly does music do to me? Does it make me more humane? OR, is it another influence that shatters my own emotional understanding of myself?"

Then, there is the other aspect that I keep pondering about. If I am not really in sync with the intended emotion of a song, am I doing justice to it? If I approach a piece of music as a way of recuperating myself out of a passing state of mental exhaustion or fatigue, I am still in the state of depression the moment I start singing a happy song. Though the transition to a state of calmness happens somewhere during the course of the song, the initial mismatch at the starting phases does exist. Is there consonance or dissonance?

Notwithstanding these two streams of thoughts, there is a third one that finds its way into my neural schema quite easily. And, it deals with questions, counter-questions and quasi-counter-questions on whether these musings on music are necessary in the first place.

Should music not ideally be just like any other form of expression that comes out spontaneously?
Oh, but music is an art form, which means it is an outcome of intense contemplation and internalization, and intimate connection?
Do all these really matter? As long as music flows like an unchecked dam, would that not wash away all that that are undesirable within and outside?
However, for music to flow like an unchecked dam, shouldn't there be an indescribable emotional blockade that waits to manifest itself?
For the manifestation to occur in its natural form, there needs to be no control mechanism in place. But, music as a construct has certain structure - and structures invariably bring about constraints - which surely means there is some control mechanism, right?

*****

Every day passes on like a scene from a battlefield, where the competing forces are the rational and emotional sides arguing about music as an entity, while music - the authority vested with the power to give out any decision ranging from a verdict in favour of one party or a complete ceasefire - exudes that all-encompassing smile.

Wednesday, September 8, 2021

Silhouettes, and Blacks and Whites

Black. White. Black. White. Some more black. Some more white. White. Black. That is all he was able to see. He rubbed his eyes again and again, splashed running water over his blood-shot eyes, strolled and sauntered here and there to ensure he appeared fresh enough, and looked over. Black. White. Black and White. The proverbial grey was missing. Poking, peeping, peering, sneaking in, glimpsing, pondering - after trying these thesaurus-sounding synonyms and multiple other means of trying to look deeper, there was no grey, or none that he could gauge and comprehend at least.

"Maybe, I am deprived of sleep, and that isn't allowing me to think like a sane man", thought he and wondered at the veracity of the statement he had just uttered to himself. Could it be true? Could it be false? It could be either, but it could just be either. Could it be neither? Could a statement he just blurted out be neither true nor false? And, if it cannot be, where is grey? Black and white, much?

He was one of the thousand other twenty-somethings (or, twenty-someones - appealing enough for the "most prolific" writer in the Indian English landscape) who belonged to the aspirational flock. An option to pursue discretionary education was a privilege in the land he belonged to, and it was meant to make folks like him more rounded, humbler, saner and of course, more prosperous. Theoretically, that is. Sitting through a class where frameworks that pitted introverts against extroverts, and those who "judge" against those who "perceive" was mind-numbingly black and white. Grey - nowhere to be found!

However, he was unable to dodge the single-mindedness towards finding grey. That was not supposed to be how things should have been. Only "bigots" and "hypocrites" assessed perspectives through blacks and whites, and for the rest of the humankind, grey should be visible, or should dawn upon, he was told. The bigger question started eating him now. "Am I a bigot now? Blacks and Whites are everywhere, in the crosswords I solve, in the chess I play; the font - background combination I use to type is Black and White. Am I missing to spot the grey, in its physical sense as well as in the abstract construct? OR, am I intellectually incompetent enough to remain oblivious to it?"

He was choking within, and for no reason. "Why am I crying? Should I cry? Can I cry? Can I not cry? Is there a state between crying and not crying? Is there an intermediate state of being that would manifest between the moment I started choking out of happiness and the instance when the first real tear drop would fall off my eyes? And, is there going to be a grey area between ecstasy and emptiness?" His eyes - black and white - started getting moist. He stood transfixed, and let the colourless but white haze of tears blur his eyesight. The world around him started blacking out.

**********

Someone was whispering in his ears. The voice that seemed to sound from a distance started incinerating the cranium; the words were being uttered. "Let white flowers blossom throughout the world! Let the world wake up to nothing but peace!" Instantaneously, there was a whiff of fresh air that seemed to fill him; he woke up and sauntered a bit. Restless, he went to the void - a cabin full of nothing. Nothing except the one thing he cherished the most. Just one thing to rescue him from the deafening silence of the dark void. A solid structure made up of a sequence of black and white, in an order. "Black and white again? This is pathetic. I am descending into an abyss. I do not want to find grey", yelled he, as his hands reached out to the sequenced black and white objects.

A combination of the blacks and whites when operated together cajoled him to utter "Let white flowers blossom throughout the world! Let the world wake up to nothing but peace!" He went on uttering the following verses. A sense of euphoria started setting in. Gradually but surely. There was a chill in the spine and it spread within a moment throughout, making him shiver mildly. Euphoria gave way to a mad rush of tears. He closed his eyes, and with the able support of the blacks and the whites, continued uttering, "Let the yellow rays of the sun fill up the expanse! Let the heart and soul wake up, charged!"

And, at that moment, between the interstitial state of maddening excitement and exciting madness, the blacks, the whites, the void and everything else created a sense of indescribable calmness. "Grey, I found grey", he uttered.

They call the object with blacks and whites a piano. The construct that transforms verses into something that could create the state of 'indescribable calmness' is referred to as music.

Friday, July 2, 2021

கரை வந்த பிறகே | #3 - முதல் நாள் இன்று, எதுவோ ஒன்று...

(முன்குறிப்பு:

தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க:

#1 - அகர முதல

#2 - ஆசான், சென்ன வட சென்ன, செரியன் நகர் & அரத்தூண் ரோட் @ நியூ மார்க்கெட் ஃபார்ம்

இப்பகுதியின் தலைப்பு எடுக்கப்பட்ட பாடலைக் கேட்க - முதல் நாள் இன்று, எதுவோ ஒன்று...)


அரும்பெரும் கனவுகளுடன் காலடி எடுத்து வைத்த நாயகனல்லவா நான்? நிதர்சனமேதும் புரியாமல் “ஃபர்ஸ்ட் டேர்ம் முடிவுல பசங்கள எல்லாம் கதையெழுதப் பழக்குறோம். செக்கண்ட் டேர்ம் கடைசியிலப் பிழையில்லாம எழுத வெக்குறோம். தேர்ட் டேர்ம் எண்ட்ல தொகுத்து ஒரு புக்காப் போடுறோம். சரித்திரத்துல இடம் புடிக்குறோம்” என்று என்னை மையமாக வைத்து மட்டுமே யோசிக்கப் பழகியிருந்தேன். முதல் பருவ முடிவில் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கதறிக் காலில் விழாத குறையாக “போர்ஷன் ஃபர்ஸ்ட். படிச்சு முன்னுக்கு வந்தப்புறம் அவங்கவங்களுக்கு என்ன வேணுமோ அதை அவங்களே பாத்துப்பாங்க” என்ற செருப்படி நெற்றியில் அறையும் என்றெல்லாம் அப்போது தெரியாது.


ஜூன்2, 2018. பள்ளி வளாகத்திற்குள் நுழையும்போதே விசாலமான விளையாட்டு மைதானம் கண்ணுக்கு நிறைவாக இருந்தது. அதில் உறுத்தலாகத் தென்பட்ட விஷயம் பள்ளிக்குத் தொடர்பேயில்லாத ஆட்கள் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்ததுதான். “கிரவுண்ட் காமன் பா. பப்ளிக் யூஸ்க்கும் சேர்த்துத்தான்” என்று பாலா தெளிவுபடுத்தினார். அந்நேரத்தில்தான் அன்று உண்மையிலேயே பள்ளி அனைத்து வகுப்புகளுக்கும் தொடங்குகிறது என்றும், ‘டீச் ஃபார் இந்தியா’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒரு நாள் தாமதமாக இணைந்து கொள்ளலாம் என்றும் அறிந்தேன்.


பின்னொரு நாளில் மைதானம் தொடர்பான வேறொரு தகவலைத் தெரிந்துகொண்டேன். அது உண்மையா இல்லையா என்று தெரியவில்லை. முதன்முதலில் பள்ளி வளாகம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியபோது, அதற்குப் பொதுமக்களிடத்தில் பயங்கர எதிர்ப்பிருந்ததாகவும், அவ்விடத்தில் பொதுப் பயன்பாட்டிற்கான எதையேனும் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், அதற்கான சமரசமாக பள்ளி நேரத்தில் மாணவர்களுக்கான வளாகமாகவும், பிற நேரங்களில் பொதுப்பயன்பாட்டிற்கான இடமாகவும் மைதானம் இருக்கும் என்ற முடிவு எட்டப்பட்டதாகவும் செவிவழிச் செய்தியாய் அறிந்தேன்.


பொது வழிபாட்டு நேரம் தொடங்குவதற்கு முன்னதாக மாணவர்களை மைதானத்திற்கு அழைத்து வர வேண்டும் என்று பாலா சொன்னார். இரண்டாவது தளத்திற்குச் சென்றபோது அவரது மாணவர்கள் பெரும்பாலானோர் ஏற்கனவே தயாராக வரிசையில் நிற்கத் தொடங்கியிருப்பது தெரிந்தது. மற்றுமொரு வித்தியாசம் பிற வகுப்பு மாணவர்கள் பலர் வண்ண வண்ண உடை தரித்து வந்திருந்தபோது, இவர்களில் நிறைய பேர் சீருடையில் இருந்தனர். நாங்கள் நடந்து வரும்போது வண்டிக்கடையிலிருந்து ஓடி வந்தவர்களும் வியர்க்க விறுவிறுக்க நின்றிருந்தனர்.


உடனடியாகக் கேள்விக்கணைகளைத் தொடுக்கத் தொடங்கினேன்.

1. “யாருங்க யூனிஃபார்ம் போட்டுட்டு வரணும்னுலாம் இன்ஃபார்ம் பண்ணது?”

2. “புது க்ளாஸ்ரூம் சாவி எப்புடி ஸ்டுடெண்ட்ஸ்க்குக் கெடைச்சுச்சு? யாரு உள்ள விட்டது? மத்த க்ளாஸ்ரூம்லாம் மூடிக்கெடக்குது? எல்லாவனும் வெளிய சுத்திட்டிருக்கான்?”

3. “இன்னைக்கு ஆக்சுவல் ரீ-ஓப்பனிங்னு சொல்லிருக்கலாமே பாலா?”


அவர் அம்பியின் குரலில் எனக்கும், அந்நியனைப் போன்று மாணவர்களிடமும் பேசிக்கொண்டிருந்தார்.

“நாங்க ஹெச்.எம். கிட்ட பர்மிஷன் வாங்கி ஒரு ரெண்டு மூணு நாளாவே க்ளாஸ் தொறந்துட்டுதான்பா இருக்கோம்.” - முதல் கேள்விக்கான பதில்.

“த டைம் இஸ் 8.40. சீக்கிரம் வெளிய வாங்க எல்லாரும்” - இது மாணவர்களுக்குக்கான சத்தம்.

”அக்பர், இலியாஸ்னு ரெண்டு பேரு இருக்கானுக. அவனுக யூஷுவலி நான் லேட்டானாக் கூட தொறந்துருவானுக” - இரண்டாவது கேள்விக்கான பதில்.

“அங்க உக்காந்து இன்னும் என்ன பண்ணிட்டிருக்க? வா டா வெளிய! கேர்ள்ஸ், உங்களுக்குத் தனியா சொல்லணுமா?” - மீண்டும் கர்ஜனை.

“சொல்லியிருந்தா என்னப்பா பண்ணியிருப்ப? நீ ஒரு மணி நேரம் முன்னாடியே வந்திருப்பியா? இல்ல, நேத்து நைட்டே வந்து படுத்திருப்பியா?” - மூன்றாவது வினாவிற்கான விடை.

“ஸ்டார்ட் வாக்கிங் க்விக்லீ டூ த க்ரவுண்ட்” - அடுத்த கட்டளை.


கீழே முதலில் அணிவகுத்துச் சென்றது ஒன்பதாம் வகுப்பு (எனக்களிக்கப்பட்ட வகுப்பு) மாணவர்கள்தாம். பின்னர் ஆறு, ஏழு, எட்டு, பத்து என அனைவரும் வரத்தொடங்கினர். வரிசை நீளப்படி ஒன்பதாம் வகுப்பு ‘அ’ பிரிவு முதலிடத்திலும், ‘ஆ’ பிரிவு இரண்டாமிடத்திலும் இருந்தன. பிற வகுப்புகளின் வரிசைகள் சுருங்கியே கிடந்தன. “நெறைய பேருக்கு இன்னும் ரீ-ஓப்பனிங் பத்தின கான்ஷியஸ்னஸ் வந்திருக்காது. ஊருக்குப் போயிட்டு வராம இருக்குற ஆளுங்கல்லாம் பொறுமையா வருவானுக. ஃபுல் ஸ்ட்ரெங்த் வர்றதுக்கு எப்புடியும் ஒரு ஒரு வாரம், பத்து நாள் ஆகும் பா” என்று பாலா அவ்வப்போது என் எண்ணவோட்டங்களுக்குப் பதிலளித்தபடியே உடன் நடந்து வந்தார். மற்ற வகுப்பு மாணவர்களின் சேட்டைகளைப் பார்த்தபோது ஒன்பதாம் வகுப்பு மட்டும் பெரிய விளையாட்டுகள் ஏதுமின்றி அமைதியாக நின்றிருந்தது வியப்பாயிருந்தது.


ஆசிரியர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்தனர். அனைவரும் பாலாவிற்கும், பாலா அனைவருக்கும் வணக்கம் சொல்லியபடி இருந்தார். உடனிருந்த என்னை “யாரு இந்த எலும்புக்கூடு? பாலா கூட நின்னுட்டிருக்குது?” என்ற சந்தேகத்துடனேயே புருவத்தைச் சுருக்கிப் பார்ப்பது போன்றே தோன்றியது. எலும்புக்கூடு ஒன்பதாம் வகுப்பு ஆசிரியனாய் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் சுழியமல்லவா? எனில், அவர்கள் “இவன் ஆசிரியனாய் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது” என்று எண்ணாமலிருந்ததில் தவறொன்றுமில்லையே? அவர்கள் அப்போது அறியாதது - ஏன், நானே அறியாதது - எலும்புக்கூட்டில் மேலும் எட்டு, பத்து கிலோ கல்வியாண்டின் இறுதியில் காணாமல் போகும் என்று!


யார் கடவுள் வாழ்த்து பாடுவது, யார் பழமொழி சொல்வது என்று குழப்பங்கள். தலைமையாசிரியை மேடையில் நின்றபடி தயங்காமல் “நைன்த் ஸ்டூடண்ட்ஸ், என்ன பாத்துட்டே இருக்கீங்க? பாலா சார் சொல்லணுமா? ஸ்டேஜ்க்கு வாங்க” என்றார். ஒரு ஐந்து நொடிகள் என்ன நடக்கிறதென்று எனக்குப் புரியவில்லை. மூன்று மாணவர்களும், ஐந்து மாணவிகளும் மேடையேறினர். ஒருவன் ஒருங்கிணைத்தான். மாணவிகள் கடவுள் வாழ்த்து பாடினர். ஒருவன் பழமொழி சொன்னான். ஒருவன் பொது அறிவுத் துணுக்கை உதிர்த்தான். “டிஸ்போஸ்” என்று அறிவித்தான் ஒருங்கிணைத்தவன். அனைத்து மாணவர்களும் வந்த வழியே அவரவர் இருப்பிடம் புரியாமல் - பலருக்கும் தங்களது புது வகுப்பிற்கு எங்கு செல்ல வேண்டும், பழைய வகுப்பில் அமர வேண்டுமா, புதிய வகுப்பிற்குச் செல்ல வேண்டுமா என்று பல குழப்பங்கள் போல - ஆங்காங்கே கூடி நின்றனர். அக்குழப்பத்திற்கிடையே பாலா, “வாப்பா ஹெச்.எம். கிட்ட இண்ட்ரொட்யூஸ் ஆகிக்கோ” என்றழைத்தார். தலைமையாசிரியையின் பெயர் சாந்தி என்றறிந்தேன். “ஓ நீங்க தான் புது ஃபெல்லோவா?” என்று பெயர் அறிந்துகொண்டார். பிற ஆசிரியைகள் - மொத்த ஆசிரியப் பெருமக்களில் விளையாட்டு ஆசிரியரும், பாலாவும், நானும் மட்டுமே ஆண்கள் - வரவே அவர்களுடன் வகுப்பறை ஒதுக்கீடு குறித்து மைதானத்தில் இருந்தபடியே உரையாடத் தொடங்கினார்.


வகுப்பறை நோக்கி நடக்கும்போது பாலா சொன்னார், “சாந்தி மேடம் ஹெல்ப்ஃபுல் பா. மத்த ஸ்கூல் மாதிரியே இங்கயும் பாலிட்டிக்ஸ் எல்லாம் உண்டு. புட் இவங்க அதெல்லாம் ஹாண்டில் பண்ணிப்பாங்க. முக்கியமா, ஃபெல்லோஸுக்கு சப்போர்ட்டிவ்வா இருப்பாங்க.” எனக்கு இன்னும் நடந்து கொண்டிருந்தவை எத்தகைய நிகழ்வுகள் என்று பிடிபடவில்லை. எவ்வித முன்னறிவிப்புமின்றி கூப்பிட்ட குரலுக்குச் சட்டென மேடையேறி வழிபாட்டை ஒழுங்காக நடத்த உதவியிருந்தனர் ‘என்’ மாணவர்கள் (அவர்களே உருப்படியாக வேலை செய்தால் அதற்குச் சொந்தம் கொண்டாடும் அரைவேக்காட்டுத்தனம் என்னிடம் மிகுதியாகவே இருந்தது).


வகுப்பறைக்குச் சென்றபோது கிட்டத்தட்ட அனைவரும் அமர்ந்திருந்தனர். சலசலப்பு இருந்தாலும், கூச்சல் குழப்பமோ, அடிதடியோ, மேசை மேல் ஏறி நின்று விளையாடிக்கொண்டிருக்கும் காட்சிகளோ எதுவும் இல்லை (என் பள்ளியில் நான் பல்வேறு தருணங்களில் மேசை மீதேறி ஆடியதற்காகவும், உணவு இடைவேளையின்போது செய்த சேட்டைகளுக்காகவும் பி.ஈ.டி. ஆசிரியர்களிடம் அடி, உதையும் மைதானத்தைச் சுற்றி ஒடும் தண்டனையும் வாங்கிய அனுபவம் உண்டு); என்னுடைய ஒன்பதாம் வகுப்பு மாணவப் பருவத்தையும் நான் சென்ற வகுப்பறையின் நடவடிக்கைகளையும் ஒப்பிடும் இந்த சுயபரிசோதனை ஆண்டு முழுவதும் எனக்குள் அவ்வப்போது ஓடிக்கொண்டே இருந்தது என்பது கொசுறுத் தகவல்.


பாலா உள்சென்றவுடன் தயங்கியபடி கதவை ஒட்டி நின்ற என்னை உள்ளே அழைத்தார். “சூர்யா சார்” என்ற பல குரல்கள் ஒலித்தன (இதே மாணவர்கள் மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பில் படித்தபோது பாலாவுடம் பணியாற்ரிய ஃபெல்லோவின் பெயர் சூர்யா என்றறிந்தேன். பின்னொரு நாளில் அவரது புகைப்படத்தைப் பார்த்தபோது மாணவர்கள் என்னை அவரென நினைத்தது மிகையில்லை என்று புரிந்தது). பின்னர் பாலா என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். என்னை மாணவர்களிடன் பேசிக்கொண்டிருக்குமாறு பணித்து மற்றொரு பிரிவிற்குச் சென்றுவிட்டார்.


அனைவரிடமும் கேட்பதற்குப் பல கேள்விகள் இருந்தன. சிரித்தபடியே பொறுமையாகப் பதிலளித்துக் கொண்டிருந்தபோது, பாலா வந்து, “ஓ.கே. இனஃப். ஷெல்ஃப்ல நோட்புக்ஸ் இருக்கும். அட்டை, லேபில் எல்லாம் இருக்கும். என்ன பண்ணணும்னு இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் தெளிவாத் தெரியும். ஃபார்ம் யுவர் டீம்ஸ் அண்ட் ஸ்டார்ட்” என்று கூறுவதற்கும், கத்துவதற்குமான இடைப்பட்ட ஒரு சத்த அளவில் பேசினார். இசைக்குக் கட்டுப்பட்ட பாம்பைப் போல சாரிசாரியாகச் சென்று நோட்டுப் புத்தகங்களையும், அட்டைகளையும், கத்தரி, பசை, லேபில் போன்ற சாமான்களையும் எடுத்துக்கொண்டு மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்தனர். பக்கத்து வகுப்பறையிலும் அக்கட்டளை பின்பற்றப்பட்டுக் கொண்டிருந்தது.


“புக்ஸ் பீ.டி.எஃப்.ஸ் எல்லாம் டவுன்லோட் பண்ணி வெச்சுக்கோ பா. ஹார்ட் காப்பீஸ் வர்றதுக்கு ஒரு டூ டேஸ் ஆகும். நீ அதுக்குள்ள ப்ரிப்பேர் ஆயிட்டன்னா ஈஸியா இருக்கும். இந்த வருஷம் சிலபஸ் சேஞ்ச் ஆயிருக்கு. புது புக்ஸ். போன வருஷம் இருந்தத விட சிலபஸ் காம்ப்ளெக்ஸா இருக்கும்னு தோணுது. நான் எய்த் ஸ்டேண்டர்ட் புக்ஸ் புதுசையும் பழசையும் கம்பேர் பண்ணிப் பாத்துட்டேன். இவனுங்க போன வருஷம் படிச்சத விட டெஃபனட்லி கஷ்டம்தான்” என்று எனக்கான அன்றைய அறிவுரை பாலாவிடமிருந்து வந்தது. “நேம்ஸ்லாம் அப்டியே கேட்டுக் கொஞ்சம் கொஞ்சமா யூ வில் கெட் யூஸ்ட் டூ தெம். ஸோ அதெல்லாம் ரொம்ப அலட்டிக்காத. முக்கியமான சில பேரு மட்டும் தெரிஞ்சு வெச்சிக்கோ இப்பொதைக்கு. அதுதான் ஒய். அக்பர். இனிஷியல் முக்கியம். ஏன்னா இன்னொரு அக்பர் இருக்கான். அவன் எஸ். அக்பர். அதோ, அது இலியாஸ். இவன் ஃபாரூக். அது ஆசீஃப். இது அபினேஷ். அந்தப் பொண்ணு ஷாஹினா. இது இன்பவாணி, ப்ரீத்தி, அஸ்வியா, ஃபாத்திமா, ஸ்ரீமதி” என்று அறிமுகம் செய்துகொண்டே போனார். ஒவ்வொருவருக்கும் என்னென்ன பொறுப்பு அளிக்கப் பட்டிருக்கிறது என்பதையும் மனத்தில் பதிந்துகொள்ளச் சொன்னார். “அவங்களுக்கே டெய்லி என்னென்ன பண்ணணும்ன்ற ரொட்டீன் தெரியும். இருந்தாலும் இட் இஸ் யூஸ்ஃபுல் ஃபார் யூ டு நோ” என்றார். வகுப்பறைக்குள்ளாகவே மாணவர்களே நடத்திப் பராமரிக்கும் ஒரு சிறுசேமிப்புத் திட்டம் இருப்பதை அறிந்தேன்.


அட்டை போட்டு லேபில் ஒட்டும் படலம் நடந்துகொண்டிருக்கும்போதே அடுத்த நாளைக்கான திட்டம் தீட்டப்பட்டது. அக்பர், ரியாஸ், திவாகர், இலியாஸ், கராமதுல்லா உள்ளிட்டோர் எட்டாம் வகுப்பறையிலிருந்து நூலக பீரோக்களை எடுத்து வர வேண்டும் என்பது அதில் முக்கியமான நடவடிக்கை. “லைப்ரரின்னா?” என்று வழக்கம்போலவே இழுத்த என்னிடம், “நம்ம க்யூரேட் பண்ணி, மெயிண்டெயின் பண்றதுப்பா. நம்ம பசங்களுக்காக. வேற யாராச்சும் கேட்டாலும் குடுப்போம். பட் எந்த க்ளாஸ்லயும் கேக்கறதில்ல” என்றார் பாலா (அவர் ‘நாம், ‘நமது’ என்று சொல்வதை அன்றிலிருந்தே உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினேன். கிட்டத்தட்ட நூறு சதவிகித உழைப்பையும் அவரே செலுத்தியிருக்கும் ஒரு விஷயத்தைக் கூட “நாம செஞ்ச எஃபோர்ட் பா இதெல்லாம்” என்று அவருடன் பணியாற்றிய இரண்டாண்டுகளிலும், எவ்வித யோசனையுமின்றி பல பணிகளுக்கான பாராட்டுக்களில் என்னையும் சேர்த்தே பேசி வந்தார்.)


இந்நடவடிகைகளுக்கிடையே உணவு இடைவேளை வந்துவிட்டது. அன்று சத்துணவுச் சாப்பாடு இல்லை, மேலும் பல வகுப்புகளில் முதல் நாளாதலால் மாணவர்கள் அரை நாள் முடிந்தவுடன் கிளம்பத் தொடங்கியிருந்தனர். நான் சாலையின் மறுபுறம் சென்று ‘உடுப்பி ஹோட்டல்’ என்றழைக்கப்படும் ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா’வில் எனக்கு இரு சப்பாத்திக்களும், அவருக்கு இரண்டு பரோட்டாக்களும் வாங்கிச் சென்றேன்.

’நம்’ வகுப்பில் வேலை மூன்று மணியைத் தாண்டிக்கொண்டிருந்தது. ஒரு சிலரை மட்டும் “நீங்க கெளம்புங்க” என்று அனுப்பிவிட்டிருந்தார். “கண்ட்ரோல் இல்லைன்னா அனுப்புன பசங்களையெல்லாம் ரொம்ப நேரம் உக்கார வைக்க முடியாதுப்பா. மத்தவங்களையும் டிஸ்டர்ப் பண்ண ஆரமிச்சுருவானுக” என்று காரணம் கூறினார்.


ஒரு வழியாக மூன்றரை மணியைத் தாண்டி வேலை முடிந்தது. வகுப்பறையைக் கூட்டிச் சுத்தம் செய்வதற்கும் அணிகள் இருந்தன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழு வேலையைச் சுழற்சி முறையில் ஏற்க வேண்டுமென்பது விதிமுறை. சாக்குகளை வெளியே போட்டு, மேசைகளை ஒருபுறம் ஒதுக்கி, துடைப்பத்தால் பெருக்கி, தண்ணீர் பிடித்து வந்து மெழுகித் துடைத்து, மேசைகளை மீண்டும் வரிசைப்படுத்தி, வகுப்பறையைப் பூட்டிச் செல்ல வேண்டும். மேற்பார்வை என்றில்லாமல், பாலாவும் இறங்கி வேலை செய்தார். உடனிருந்து மேசைகளை இழுத்துப்போட்டார். ஸ்தம்பித்து நின்றிருந்த நானும் பெரியவர்கள் விளையாடும் மட்டைப்பந்தாட்டத்திற்கிடையில் புகுந்து ஓடும் மழலைக் குழந்தையைப் போல் பெயரளவிற்கு ஏதேதோ செய்துகொண்டிருந்தேன்.


முடிந்ததும், “உனக்கும் ஒரு கீ ஸெட் டூப்ளிகேட் பண்ணி ரெடியா வெச்சிடுறேன் பா. ஸோ தட் யூ கேன் டேக் சார்ஜ். நாளைக்குப் பாக்கலாம்” என்று பாலா முடித்தபோது, “நீங்க வரலையா?” என்றேன். ‘என்ன என்னைய மட்டும் வழியனுப்புற மாதிரி சொல்றாரு?’ என்பது எனக்குள் எழுந்த கேள்வி. பொதுவாகவே வழிசொல்வதிலும், வழிகளைப் புரிந்து கொள்வதிலும் நான் மந்தமான ஆள். என்னதான் ‘கூகிள் மேப்ஸ்’ எல்லாம் இருந்தாலும் “பாத்துடா, நார்த் சென்னை” என்று பலரும் கூறியிருந்த எச்சரிக்கை வார்த்தைகளால் சற்றே தயக்கம். “நான் செண்டர் போறேன் பா. அங்க கொஞ்சம் வேலையிருக்கு. யூ கேரி ஆன்” என்றபடி அவர் ஒருபக்கம் நடையைக் கட்டினார். ‘செண்டரா? அதென்ன?’ என்று கேள்விகள் எழுந்தாலும், அவரிடம் குடைய விருப்பமில்லை. எனவே மௌனமாகத் தலையாட்டினேன்.


கடற்கரைச் சாலை நோக்கி நடந்த எனக்குள் பல்வேறு கேள்விகள்:

1. ஏன் இவ்ளோ ஸ்ட்ரிக்டாவே இருக்காரு? இன்னைக்குக் கூட நெறைய பசங்கள கண்டபடி திட்டுனாரே!

2. எப்புடி அவர் சொல்லாமலேயே சில விஷயம் தானா நடக்குது? டப்புனு ஸ்டேஜ் ஏறிக் கலக்குறாங்க ஸ்டூடண்ட்ஸ் எல்லாம்?

3. க்ளாஸ்குள்ள ஸ்டூடண்ட்ஸே மெயிண்டெய்ன் பண்ற அளவுக்கு உண்டியல்லாம் வெச்சுருக்காங்க?

4. ஸ்கூலே நோட், புக்ஸ் எல்லாம் இன்னும் ஒரு ரெண்டு நாள் கழிச்சுத்தான் குடுக்கப்போகுது! அதுக்குள்ள இவரு ஏன் நோட்ஸ் எல்லாம் வாங்கி வெச்சாரு? யாரு குடுத்த காசு அது?

5. ஏன் பசங்க எல்லாம் ஸ்கூல்ல வந்து அட்டை போடுறாங்க? நாமல்லாம் ஸ்கூல்ல படிக்கும்போது வீட்டுலயே தானே போட்டுட்டுப் போவோம்?

6. மத்த க்ளாஸுக்கும் இந்தக் க்ளாஸுக்கும் பயங்கரமான வித்தியாசம் இருக்கே? என்ன காரணம்?

இதையெல்லாம் விட முக்கியமான இறுதிக்கேள்வியாக,

7. பாலா - நீங்க நல்லவரா? கெட்டவரா? நீங்க கொடுமக்காரர்னு சொல்றது உண்மையா? பொய்யா?

அன்று ராம்பிரசாத்துடன் உரையாடுவதற்குப் பல விஷயங்கள் இருந்தன. ‘கோவை சாவித்திரி மெஸ்’ஸில் தின்றபடியே பேச வேண்டும் என்று நினைத்தபடி ஷேர் ஆட்டோவில் ஏறினேன்.

(பி.கு.: முதல் இரண்டு மாதங்களுக்குப் பிறகான அனுபவங்களை 2018-ல் எழுதியிருந்தேன். இச்சமயத்தில் அதைப் படிப்பதும் சாலப் பொருத்தமானது. இங்கே சொடுக்கவும்)

Sunday, June 27, 2021

கரை வந்த பிறகே | #2 - ஆசான், சென்ன வட சென்ன, செரியன் நகர் & அரத்தூண் ரோட் @ நியூ மார்க்கெட் ஃபார்ம்

 முன்குறிப்பு:

1. முதல் பகுதியைப் படிக்க, இங்கு சொடுக்கவும்

2. ஜெயமோகன் விசிறிகளுக்கு: இங்கு ‘ஆசான்’ என்பது அவரைக் குறிக்கும் சொல்லல்ல.


**********


ஜூன் 2, 2018


முதல் நாள் இரவுதான் சென்னைக்கு வந்திருந்தேன். புதுவண்ணாரப்பேட்டையில் வாடகைக்கு வீடெடுக்கும் வரை ‘டீச் ஃபார் இந்தியா’வில் வேலை செய்த நண்பர் ராம்பிரசாத்தின் வாடகை வீட்டில், சாலிக்கிராமத்தில் ஜாகை. இரவு உண்ட ’கோவை சாவித்திரி மெஸ்’  மசால் தோசையும், சப்பாத்திகளும் அருமையான உறக்கத்தை அளித்துவிட்டிருந்தன.


ஜூன்3-ஆம் தேதியே பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு திறப்பதாக இருந்தாலும், ஜூன்2 அன்றே ஒருமுறை பள்ளிக்குச் சென்றுவிட வேண்டுமென்ற நிலைமை. ”நிலைமையா? அப்போ நீயா முடிவெடுக்கலையா? யாரோ வற்புறுத்தி பள்ளிக்கு ஒரு நாள் முன்னாலயே வரணும்னு கட்டாயப்படுத்துன மாதிரி சொல்ற?” என்ற கேள்விக்கு எனது பதில், “ஆம்”. என்னை வரச் சொல்லியிருந்தவர் ஆசான் (’மெண்டார்’ எனும் ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் அதுவே என நினைக்கிறேன். ‘ஆசிரியர்’ என்று சொன்னால் ‘டீச்சர்’ என்று பொருள்படுகிறது; ’வழிகாட்டி’ என்பது ‘கைட்’ என்றாகிவிடுகிறது) பாலசுப்ரமணியன் (எ) பாலா.


**********


ஐந்து வார ‘ட்ரெய்னிங்’-ன்போதே இவரைப் பற்றிய பலவாறான கருத்துக்களைச் செவிவழிச் செய்திகளாய் அறிந்திருந்தேன்.

1. “2012 தொடங்கி 2014 வரைக்கும் ஃபெல்லோவா இருந்தவரு. அதுக்கப்புறம் வேற வேலைக்கெல்லாம் போகாம அவரு க்ளாஸ் பசங்களப் படிக்க வைக்கறதுக்காக ஃபுல் டைம் அதே ஸ்கூல்லயே வேலை செய்யுறார்”

2. “அவருகிட்ட அளவா வெச்சிக்கோ. புதுசா வர்றவங்கள அடக்கி அவரு வழிக்குக் கொண்டுபோயிடுவாரு”

3. “பசங்கள அநியாயத்துக்கு அடிப்பாரு. அதெல்லாம் க்ரைம். ரௌடித்தனமா நடந்துப்பாரு நீதான் க்ளாஸ்ல ஒரு ஸ்டெபிலிட்டி கொண்டு வரணும்”

இத்தகைய துணுக்குகள் எனக்கு மிரட்சியை ஏற்படுத்தியிருந்தன.


ஏப்ரல் 27, 2018 அன்று புனே நகரில் தொடங்கிய ‘ட்ரெய்னிங்’கில் இருந்த எனக்கு, பல்வேறு சந்தேகங்கள் இருந்தன. முந்தைய நிறுவனத்தில் இருந்ததுபோலன்றி சற்றே வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மனத்தில் நிலைபெற்றிருந்தது. அவ்வப்போது வழிகாட்டிகளிடமும், ட்ரெய்னர்களிடமும் எதிர்க்கேள்விகள் கேட்டு வாயைக்கொடுத்து அனைவரிடமும் வாங்கிக்கட்டிக் கொண்டிருந்தேன். எனக்கு ‘டீச் ஃபார் இந்தியா’வில் சொல்லித் தரப்பட்ட வழிமுறைகளின் மேல் பெரிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கவில்லை. யாரிடம் சொல்லித் தெளிவுபடுத்திக்கொள்வது என்றும் தெரியவில்லை.


மே மாதம் மூன்றாவது வாரத்தில் ஒவ்வொருவரும் எந்தப் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு வந்தது. எனக்கு அளிக்கப்பட்ட பள்ளியின் பெயர் ’நியூ மார்க்கெட் ஃபார்ம்’. விநோதமான பெயராக இருந்தது. அப்போது உடனிருந்த மேற்குறிப்பிட்ட ‘சாலிக்கிராமத்து நண்பர்’ “ஓ என்.எம்.எஃப்.-ஆ? சூப்பர். பாலாண்ணா ஸ்கூல். செம்மையா இருக்கப் போகுது” என்று சிரித்தார். அதன்பிறகே, மேற்சொன்ன மூன்று துணுக்குகளையும் பலரிடமிருந்து கேட்க நேர்ந்தது.


”எங்கடா கால விட்டிருக்கேன் நானு?” என்று எனக்குள்ளாகவே கேட்டுக்கொண்டிருந்தேன். பயங்கர குழப்பமான மனநிலையில் தலை வெடித்துக்கொண்டிருந்தது. “புலி கிட்டயிருந்து தப்பிக்கிறேன்னு சிங்கத்துகிட்ட மாட்டிக்கிட்டேனோ?” என்று நடுங்கிக்கொண்டிருந்தேன். இருவிதமான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

1. முதல் வேலையில் பதுங்கியது போலன்றி, சண்டைக்காரனாக மாறி எனக்கான வெளியை நானே உருவாக்கிக் கொள்வது.

2. ’சண்டைக்காரனாக மாறி, கேள்விகள் பல கேட்கத் தொடங்கிவிட்டால், இங்கும் வேலை போய்விடுமோ?’ என்ற எதிர்க்கேள்வி.


இத்தகைய குழப்பங்களுக்கிடையில்தான் மே மூன்றாம் வாரத்தில் என் வாட்ஸாப்பிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. “ஹாய் கிரி, திஸ் இஸ் பாலா. ஐ வொர்க் அட் என்.எம்.ஃப். ஆஸ் அ சீ.ஈ.ஜீ. அலம், ஐயம் க்ளாட் டு வொர்க் வித் அ ஃபெல்லோ சீ.ஈ.ஜீ.-இயன்.” ("Hi Giri, this is Bala. I work at NMF. As a CEG alum, I am glad to work with a fellow CEGian") சீ.ஈ.ஜீ. என்பது காலேஜ் ஆஃப் இஞ்சினியரிங் கிண்டி. அதாவது கிண்டி பொறியியல் கல்லூரி. அவர் 2002-ல் ஈ.சீ.ஈ. படித்தவர் என்று பின்னர் அறிந்தேன். குறுஞ்செய்திக்குப் பதிலெதுவும் அனுப்பவில்லை.

அதற்கடுத்த நாள் ராம்பிரசாத் தன் கைப்பேசியை எடுத்து வந்து நீட்டினார். “லைன்ல பாலாண்ணா. உன் கிட்டப் பேசணுமாம்.” எனக்கு அவரிடம் பேச வேண்டுமென்ற விருப்பம் பெரிதாக இல்லையெனினும், வேலையனைத்தையும் விட்டுவிட்டுப் பள்ளியில் மாணவர்களைப் படிக்க வைப்பதற்கான முனைப்புடன் செயல்படுகிறார் என்ற செய்தி அவர்மீது மரியாதையை உருவாக்கியிருந்தது.


“ஹலோ?”

”ஹலோ! நான் பாலா பேசுறேன். என்னப்பா, எப்புடி இருக்க?” - குரலில் ஒரு கம்பீரம்.

“ஹாய் பாலா, நல்லா இருக்கேன். நீங்க?” - தயங்கித் தயங்கியே பேசினேன். ‘பெரிய ஆளு கிட்ட பேசிட்டிருக்கோம்’ என்ற பிம்பம் மனதில் பதியத் தொடங்கி விட்டிருந்தது.

“குட் பா. எப்புடிப் போயிட்டிருக்கு ட்ரெய்னிங்லாம்?” - அவர் கேட்ட தொனியிலேயே கிண்டல் தொனித்தது. என்னிடம் ஏதோ பதிலை எதிர்பார்த்துக் கேட்பது போலவே இருந்தது.

“ம்... பரவாயில்லைங்க. போகுது.” - உடனே இப்படியோ, அப்படியோ பதில் சொல்லி மாட்டிக்கொள்ள வேண்டாமே என்று பொத்தாம்பொதுவாக ஒரு பதிலைச் சொல்லி மழுப்ப முயன்றேன். ஆனால், ட்ரெய்னிங்கில் ஏதோ சரியில்லை என்று சொல்லி, அவரது கருத்தைக் கேட்க வேண்டுமெனத் தோன்றியது.

“நல்லா இல்லையா?” - என் எண்ணவோட்டத்தை எனது குரல் அவருக்கு அறிவித்திருக்க வேண்டும். தெள்ளத்தெளிவாகக் கேட்டார்.

“இல்ல. அப்புடி இல்ல. நான் ஸ்கூல் படிக்கும்போது என் டீச்சர்ஸ்லாம் இப்புடி க்ளாஸ் எடுத்ததில்ல. இவங்க சொல்ற மாதிரி லெஸன் ப்ளான் (Lesson Plan), இண்டிப்பெண்டண்ட் ப்ராக்டீஸ் (Independent Practice) அப்புடின்னு எல்லாம் பிரிச்சு க்ளாஸ் எடுத்தா நைன்த் ஸ்டாண்டர்ட் போர்ஷன்ஸ் முடிக்க முடியுமான்னு ஒரு டவுட் இருக்கு...” - இழுவையுடன் முடித்தேன். ஆனால் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.

“அவங்க சொல்றதெல்லாம் கேட்டுக்கோ. இங்க வரும்போது நீயே புதுசா நெறைய கத்துப்ப” - எனக்கு ஆறுதலளிப்பதற்காகச் சொல்கிறார் என்று நினைத்தேன். இரண்டு வருடங்கள் அவருடன் பண்ணியாற்றுவதில் எனது கல்வி சார்ந்த பார்வை குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் நிறைய கற்றுக்கொள்வேன் என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

“ஒகே பாலா. நான் உங்க நம்பர் ராம் கிட்ட வாங்கிக்குறேன். டவுட்ஸ் இருந்தா மெசேஜ் பண்றேன்.” - அவரிடம் உரையாடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என உண்மையிலேயே முடிவெடுத்திருந்தேன்.

“நல்லது பா. ஆல்ஸோ, வெல்கம் டு என்.எம்.எஃப்.” - என்.எம்.எஃப். என்பது நியூ மார்க்கெட் ஃபார்ம் என்பதன் சுருக்கம்.

“தேங்க்ஸ் பாலா. லுக்கிங் ஃபார்வர்ட்.”


பேசி முடித்த பின்னர் சற்றே தெளிவு பிறந்திருந்தது. “அவங்க சொல்றதெல்லாம் கேட்டுக்கோ. இங்க வரும்போது நீயே புதுசா நெறைய கத்துப்ப” என்ற சொற்களின் அர்த்தம் நன்றாகவே புரிந்தன. நடைமுறையில், தினம் தினம் வகுப்பறையில் நான் கற்க வேண்டிய விஷயங்கள் அதிகமானவை எனும் நினைப்பு சென்னைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகமாக்கியது.


சட்டென நினைவு வந்தவனாய், “ஐயையோ! அவர்கிட்ட முக்கியமான விஷயத்தக் கேக்க விட்டுட்டேனே!” என்றெண்ணிக்கொண்டு அவருக்கு வாட்ஸாப் செய்தேன். “ஹாய் பாலா. ஸாரி, கேக்கணும்னு நினைச்சேன். அங்க நீங்க க்ளாஸ்க்கு லெஸன் ப்ளான்லாம் எப்புடி பண்ணுவீங்க?”

அவர் அன்று சொன்ன பதில் இன்றும் தெளிவாய் நினைவிருக்கிறது. “வீ டோண்ட் ப்ளான் பா. வீ ஜஸ்ட் விங் இட்.” ("We don't plan pa. We just wing it.") அப்பதிலைப் படித்தவுடன் உப்பில்லாத சோற்றைத் தின்றதுபோலாகிவிட்டது. ஏனோ அதில் ஒரு உத்வேகமே இல்லாதது போலத் தோன்றியது. ‘என்னடா இந்த மனுஷன்! அவ்ளோ சின்சியர்னு சொல்றாங்க? இவ்ளோ வருஷமா வேல வெட்டி எல்லாம் விட்டுட்டு வந்துருக்காரு ஸ்கூலுக்கு ப்ளான் கூட பண்ணாமக் க்ளாஸ் எடுப்பாரா? இன்சின்சியரான ஆளா இருக்காரே!’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அவர் சொன்னதன் பொருள் அது அல்ல; ‘எவ்வளவுதான் திட்டமிட்டாலும் ஒரு வகுப்பென்பது நாம் எதிர்பார்த்தபடி செல்லாது.’ - இதுதான் உண்மையான பொருள் என்பதைப் பின்னர் அனுபவத்தில் அறிந்தேன். அதையெல்லாம் எப்படியும் பின்னால் பார்க்கத்தானே போகிறோம்!?


**********


மறுபடியும் ஜூன் 2-ஆம் தேதிக்கு வருவோம்.


”பாலாண்ணா கோடம்பாக்கம் ஸ்டேஷன்ல 7.30 மணிக்கு வெயிட் பண்றேன்னு சொல்லிருக்காரு. நான் ஜிம் போயிட்டு வந்து உன்ன ஸ்டேஷன்ல ட்ராப் பண்ணிடுறேன். அவர் கூடவே ஸ்கூலுக்குப் போயிடு.” - ராம்பிரசாத் என்னை எழுப்பி இதைச் சொல்லும்போது காலையில் மணி 6. அரைத்தூக்கத்தில் நான் “செரி, ராம். நீங்க போயிட்டு வாங்க. ஐ வில் பீ ரெடி” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தூங்க முயன்றேன். “டேய், அவர் கொஞ்சம் சீரியஸான ஆளு. டைம் ரொம்ப எதிர்பாப்பாரு. நீ பாட்டுக்கு தூங்கிட்டு லேட் ஆக்கிடாத” என்று ஒருமுரைக்கிருமுறை ராம் சொல்லவே, நான் கடுப்பானேன்.


“நாளைக்குத்தான் ராம் ஸ்கூலே. இவரென்ன இன்னைக்கு வர சொல்றாரு? செரி போங்க, ரெடி ஆகுறேன்” என்றபடி படுக்கைத் துணிகளை மடித்து வைக்கத் தொடங்கினேன்.


சொன்னபடி 7.30க்கு அவர் வந்துவிட்டார் போல. என்னை கோடம்பாக்கம் ரயில் நிறுத்தத்தில் விட்டுவிட்டுப் படியேறி வந்து பாலாவிற்கு அறிமுகம் செய்துவிட்டுக் கிளம்பினார் ராம். இறுக்கமான, நம்பிக்கை கொடுக்கும் கைக்குலுக்கலுடன் தொடங்கியது பாலாவுக்கும் எனக்குமான முதல் உரையாடல்.

”என்னப்பா கடலூர்ல இருந்து எப்போ சென்னை வந்த?”

“நேத்தைக்கு ராத்திரி, பாலா” - பெயரழைத்துக் கூப்பிடலாம் என்ற ஒரு நல்ல விஷயத்தை மட்டும் ஐ.டி. நிறுவனம் எனக்குக் கற்றுக்கொடுத்திருந்தது.

“ட்ராவல்லாம் ஓகேவா?”

“ஹ்ம்ம். ஆல் குட் பாலா.”

“என்ன சொல்றான் ராம்?” - இந்தக் கேள்வி வம்புக்கானதா, அல்லது உண்மையிலேயே ஏதேனும் பதில் சொல்ல வேண்டுமா என்று தெரியவில்லை.

“ஸ்கூலுக்கு ஒரு நாள் முன்னாடியே போறது நல்லதுன்னு சொன்னாரு” என்று கூச்சமே படாமல் பொய் சொன்னேன்.

7.40-க்கு ரயிலேறினோம். ”இதான்பா நம்ம ரூட். நான் பொதுவா நுங்கம்பாக்கம் ஸ்டேஷன்ல ஏறுவேன். என் வீடு சூளைமேடுல இருக்கு. ஸோ எனக்குப் பக்கம். இன்னைக்கு உனக்கு ஃபர்ஸ்ட் டைம்ன்றதுனால வந்தேன். கோடம்பாக்கம் - நுங்கம்பாக்கம் - சேத்பேட் - எக்மோர் - பார்க் - ஃபோர்ட் - பீச்; இதான்பா ஸ்டேஷன்ஸ். ஸோ உனக்குக் கோடம்பாக்கத்துல ஏறுனா ஆறாவது ஸ்டேஷன். எப்புடியும் அதான் லாஸ்ட். ஸோ பயப்பட வேணாம்.”

அவர் சொல்வது பெரிதாகக் கவனம் ஈர்க்கவில்லை. எனக்கு “நீங்க ஏன் வேலைய விட்டுட்டு இதைய உங்க தோள்ல இழுத்துப் போட்டுட்டு செய்யுறீங்க? உங்களுக்கு எங்க இருந்து வருது காசு? ஏன் உங்களுக்கும் ‘டீச் ஃபார் இந்தியா’க்கும் வாய்க்காத் தகராறு?” என்று பல கேள்விகளைக் கேட்க வேண்டுமென்று தோன்றியது.

“அதென்னங்க ஸ்கூலுக்குப் பேரு நியூ மார்க்கெட் ஃபார்ம்?” - முக்கியமான கேள்விகளை அவரிடம் நன்றாகப் பழகியபின் கேட்டுக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

“அங்க பெரிய சந்தை இப்பவும் உண்டுப்பா. மார்க்கெட் சந்துன்னே ஸ்கூல் பக்கத்துல இருக்கு. ஆக்சுவலா ஸ்கூலோட ஃபுல் பேரு ’சென்னை ஹை ஸ்கூல் - அரத்தூண் ரோட் @ நியூ மார்க்கெட் ஃபார்ம்’” - அவரிடம் மார்க்கெட் ஃபார்ம் தொடர்பான பின்கதைகள் இருக்கும் என்று பட்டது. ஆனால் அதைவிட சுவாரசியமான ஒரு செய்தியைத் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது.

”அதென்னங்க ஸ்கூல் பேருல @ சிம்பல்லாம் வருது?” - சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் ஏதோ உறுத்தலாக இருக்கவே கேட்டுவிட்டேன்.

“ஓ அதுவா? நம்ம ஸ்கூல் வெறும் நியூ மார்க்கெட் ஃபார்மாத்தான்பா இருந்துச்சு. அது ஒரு மெர்ஜர். ராயபுரத்துல அரத்தூண் ரோடுன்னு ஒண்ணு இருக்கு. அங்க இருக்குற ஒரு ஸ்கூல் நம்ம ஸ்கூலோட மெர்ஜ் ஆனதுனால தான் ‘அரத்தூண் ரோட் @ நியூ மார்க்கெட் ஃபார்ம்’.” - விளக்கம் திருப்திகரமாக இருந்தது.

“ஏன் மெர்...?” - கேள்வியை நான் முடித்திருக்கவில்லை. அவர் அதை எதிர்பார்த்திருக்க வேண்டும்.

“நெறைய ரீஸன்ஸ் இருக்கலாம்பா. ஸ்டாஃப் ஷார்ட்டேஜ், ஸ்டூடண்ட்ஸ் நெறைய பேரு ட்ராபவுட் ஆகுறது அப்புடின்னு.”

தலையாட்டிக்கொண்டே இருந்தேன். அவர் பேசி முடித்திருந்தார். அதை உணர்ந்தவனாய் ஜன்னல் வழியாக வெளியே பார்க்கத் தொடங்கினேன். அவரே கேட்டார். “நார்த் சென்னை இதுக்கு முன்னாடி வந்திருக்கியாப்பா?” - என்ன பதில் வரும் என்று அவருக்கு சர்வநிச்சயமாகத் தெரிந்திருக்கும்.

“இல்ல பாலா. கடைசி அஞ்சு வருஷமா சென்னையில தான் இருந்திருக்கேன். காலேஜ் நாலு வருஷம் அப்புறம் திருவான்மியூர்ல ஒரு வருஷம் தங்கியிருந்தேன் போன வேலைக்காக. ஆனா இந்தப் பக்கம் வந்ததில்ல.” - பதிலேதும் சொல்லவில்லை அவர். ஆனால் பொதுவாக ஒரு புன்னகையை உதிர்த்தார்.


கடற்கரை நிலையம் வந்துவிட்டிருந்தது. இறங்கி நடைமேடையில் நடந்து பஜார் பக்கம் இருந்த சப்வேயில் இறங்கி மறுபுறம் சென்று ஷேர் ஆட்டோவிற்காக நின்றோம். ஹெச்.எஸ்.பீ.சீ. வங்கிக் கட்டடம் பளிச்சென்ற வெள்ளை நிறத்தில் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. “பஸ்ஸும் கெடைக்கும் பா. ஆனா நெறைய கூட்டம் இருக்கும். க்ளாஸ்க்குப் போகும்போதே வேர்த்து ஊத்திரும். ஆட்டோன்னா உக்காந்து போகலாம்.” என்றார்.


வந்த ஷேர் ஆட்டோவில் “சோலாஸ்” என்றார். ஓட்டுநர் தலையசைத்தவுடன் அமர்ந்தோம். ”அதென்னங்க ‘சோலாஸ்’?” என்றேன். “நாம எறங்க வேண்டிய பஸ் ஸ்டாப் பேறு என்.4 பா. என்.4 போலீஸ் ஸ்டேஷன் இருந்ததுனால அந்த ஸ்டாப்புக்குப் பேரு அப்புடி. ஆனா அங்க எறங்குனா ஸ்கூலுக்குக் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா நடக்கணும். அதையத் தாண்டிக் கொஞ்ச தூரத்துல ஸ்வாலோஸ் எஸ்டேட்னு (Swallows Estate) ஒரு எடம் இருந்துச்சு. அதுதான் பேச்சு வழக்குல சோலாஸ் ஆயிருச்சு” - இதுவரை அன்று நான் தெரிந்து கொண்ட எத்தனையாவது புதிய தகவல் அது என்று புரியவில்லை.


கடற்கரை நிலையத்தில் ஏறிய நாங்கள், ராயபுரம், கல்மண்டபம், காசிமேடு எல்லாம் கடந்து என்.4-ஐயும் தாண்டி, ‘சோலாஸில்’ இறங்கினோம். செரியன் நகர் மெயின் ரோடில் நடக்கும்போதுதான் கவனித்தேன். சாலையின் இருபுறங்களிலும் குறுக்குச்சந்துகள் பிரிந்துபிரிந்து சென்றன. ஒரு பக்கம் தேசிய நகர் ஒன்றாம் தெரு, இரண்டாம் தெரு, மூன்றாம் தெரு என்றும், மறுபக்கம் செரியன் நகர் ஒன்றாம் தெரு, இரண்டாம் தெரு, மூன்றாம் தெரு என்றும் பலகைகள் அடையாளம் காட்டின. அடைசலான வீடுகள். தண்ணீர்க்குடத்தை வைத்துக்கொண்டு பலர் நின்றுகொண்டிருந்தனர். தண்ணீர் லாரி ஒன்று நின்றிருந்தது. குடிநீர்ப் பகிர்வில் ஏதோ தகராறு நடக்கவே, வசைச்சொற்கள் மாறி, மாறி விழுந்தன. சட்டை போடாமல் வீட்டு வாசல்களிலும், வீதியின் ஓரத்திலும் ஒரு சிலர் பல்துலக்கிக் கொண்டிருந்தனர். வண்டிக்கடை ஒன்றில் பள்ளிச் சீருடை அணிந்து ஒரு கூட்டம் இட்லி வடை தின்றுகொண்டிருந்தது. பத்துப் பன்னிரெண்டு பேர் கொண்ட அக்குழுவில் திடீரென்று இரண்டு மூன்று பேர் பாலாவைப் பார்த்து விட்டுப் பள்ளி வளாகத்திற்குள் தெறித்து ஓடினர்.


சர்வ வல்லமை படைத்த, அனைத்தும் அறிந்த மேதாவியாய் உணர்ந்து பெருமிதத்துடன் பள்ளியின் விளையாட்டுத் திடலை ஒட்டியிருந்த வாயிற்கதவின் வழியே, ஏதோ அப்பள்ளியை மீட்டெடுக்க வந்த தேவதூதன் என்று என்னை நானே எண்ணிக்கொண்டு வலதுகால் எடுத்துவைத்தேன், அடுத்த ஒரு மாதத்தில் என் கர்வம் அனைத்தும் சின்னாபின்னமாகிச் சிதறிவிடும் என்றறியாமலேயே.


அரசுப் பள்ளியின் தற்காலிக ஆசிரியனாய் எனது முதல் நாள் தொடங்கவிருந்தது.


**********


மூன்றாம் பகுதியைப் படிக்க:

#3 - முதல் நாள் இன்று, எதுவோ ஒன்று...


Saturday, June 26, 2021

கரை வந்த பிறகே | #1 - அகர முதல

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இருபது முறையேனும் எழுத வேண்டுமென்று நினைத்தபடியோ, எழுதத் தொடங்கிய பின்னர் முடிக்காமலேயோ கிடப்பில் போடப்பட்டுக் கொண்டேயிருந்த பிறகு, இறுதியாக இன்று அமர்ந்தாகி விட்டது.


பொதுவாக, எழுத வேண்டும் என்றமர்ந்த பிறகு இவ்வளவு யோசித்துக் குழப்பிக் கொண்டதேயில்லை. ஆனால் இம்முறை எழுத வேண்டும் என்று எத்தனித்தது 2018-ல் இருந்து 2020 வரையிலான இரண்டு வருடங்களில் நான் என்ன பணி செய்தேன், என்ன கற்றேன் என்பது குறித்த ஒரு தன்னிலை விளக்கம்.


ஆரம்பத்திலேயே பல குழப்பங்கள்.

1. பல நாட்கள் தொடர்ச்சியாகத் தட்டச்சு செய்து, மிக நீண்ட பதிவாக மொத்தமாகப் பதிவிடலாமா? அல்லது, பல பகுதிகளாக அவ்வப்போது பதிவேற்றலாமா?

2. நிறைய பேர் படிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது என்பதற்காக ஆங்கிலத்தில் எழுதலாமா? அல்லது, சரளமாக வரும் தமிழில் எழுதலாமா?

3. வரலாற்றில் எழுதிப் பொன்னெழுத்துக்களால் பொறிக்கும் அளவிற்கு நான் எழுத எத்தனிப்பது உபயோகமானதா?


எனினும் இக்குழப்பங்கள் தாண்டி, சிற்சில நிகழ்வுகள் முக்கி முனகி என்னை எழுத வைத்திருக்கின்றன.

1. இளங்கலைப் படிப்பு முடித்து நான்கு வருடங்கள் சென்ற பிறகு, போதுமான வேலையனுபவத்துடன் மேலாண்மைக் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தபோது நான் தொடர்ச்சியாக எதிர்கொண்ட “நீ நிலையாக ஒரு வேலையில் இருந்திருக்கவில்லை. Your profile shows professional inconsistency” என்று தொடர்ச்சியாக என்னைக் குற்ற உணர்ச்சிக்குத் தள்ளிய மேதகு நேர்காணல் நடத்தியவர்கள். (பி.கு.: பல நிராகரித்தல்களுக்கும், சில ஒப்புதல்களுக்குமிடையே ஒருவழியாக ஒரு நல்ல மேலாண்மைக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது என்பது வேறு விஷயம்.)

2. தமிழக அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்பான “2 லட்சம் பள்ளி மாணவர்களுக்குக் கண் பரிசோதனை செய்யப்படும்” என்பது.

3. நண்பர்கள் பலர் 2019-ல் இருந்தே என்னுடைய வேலை அனுபவங்களைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று திரும்பத் திரும்பக் கூறி வந்தனர். வெவ்வேறு காரணங்களால் “பிறகு பார்க்கலாம்” என்ற அளவில் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். சமீபத்தில் 2018-2020 காலகட்டத்தில் என்னை வழிநடத்திய நபருடன் பேசுகையில், அவரும் “நாம அனுபவத்த எல்லாம் எழுதணும் பா” என்று சொல்லக்கேட்டு, அடியேனும் வேலை வெட்டியின்றி தண்டச்சோறு தின்று குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருக்கிறபடியால், எழுதலாமே என்று எண்ணம்.


மேற்சொல்லியபடியே, அப்படி நான் 2018 தொடங்கி 2020 வரையிலான இரண்டாண்டுகளில் அப்படியென்ன சாதித்து விட்டேன் என்று இந்த விளக்கம்? காரணம் இருக்கிறது. இடஞ்சுட்டிப் பொருள் விளக்குவதற்கு முன், சில விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது.


நான் கடலூரைச் சேர்ந்தவன். கிண்டி பொறியியல் கல்லூரியில் 2017-ஆம் ஆண்டு இயந்திரவியல் பிரிவில் படித்து முடித்து, ஐ.டி. நிறுவனமொன்றில் பணியாற்ற முனைந்தவன். உலக ஆன்றோர் சான்றோரால் ’பணிபுரிபவர்களைக் கண்ணியத்தோடு நடத்தும் நிறுவனம்’ என்று அன்போடு அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அவ்விடத்தில், எனக்கு அமைந்த மேலாளருக்கும் எனக்கும் வாய்க்கால் தகராறு. தகராறு என்றால் நான் ஏதோ அவரை எகிறிச் சென்று சட்டையைப் பிடித்துவிட்டேன் என்ற ஹீரோயிஸத் தகராறல்ல. “நீயெல்லாம் ஒரு ஆளா? உன்னையெல்லாம் எதுக்கு வேலைக்கு எடுத்தாங்க?” என்ற ரீதியில் தினம் காரணமேயின்றி அவரிடம் பேச்சு வாங்க நேர்ந்ததைத்தான் நாசூக்காகத் ‘தகராறு’ என்கிறேன்.


2017 ஜூன் 21-ஆம் தேதி தொடங்கிய அப்பணியிலிருந்து 2018 மார்ச் 30-ஆம் நாள் விலகினேன். சற்றேறக்குறைய 9 மாதங்கள்; அவ்வளவே. தினமும் வேலைக்குச் சென்று, தேவையில்லாமல் கூனிக் குறுகி நின்று, எதற்கும் லாயக்கில்லை என்று வசவுகளை வாங்கிப் பழகிப் போய்விட்டிருந்த எனக்கு, இழந்த என் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது. வேலையிடத்தில் வெற்று அவமானத்திற்கு மட்டுமே பழக்கப்பட்டிருந்த நான், எனக்கு என்னையே அடையாளப்படுத்திக் கொள்ள வழிகொடுக்கும் ஒரு வேலையை ஜனவரி 2018-ல் இருந்தே தேடத் தொடங்கிவிட்டிருந்தேன். ‘டாடா ட்ரஸ்ட்ஸ் ஃபெல்லோஷிப்’ (Tata Trusts Fellowship), ‘அஸீம் ப்ரேம்ஜி ஃபவுண்டேஷன் ஃபெல்லோஷிப்’ (Azim Premji Foundation Fellowship), ‘டேட்டா காப்ஸ்’ (Data Cops), ‘காந்தி ஃபெல்லோஷிப்’ (Gandhi Fellowship), ‘லாம்ப் ஃபெல்லோஷிப்’ (LAMP Fellowship) போன்ற இயல்பான கார்ப்பரேட் பணியிலிருந்து சற்றே மாறுபட்ட வேலைகளுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தேன்.


எதிர்பார்த்தது போலவே பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தன. மின்னஞ்சலைத் திறந்துபார்த்தாலே “வீ ரெக்ரெட் டு இன்ஃபார்ம் யூ தட் யுவர் அப்ளிக்கேஷன் ஹாஸ் பீன் ரிஜெக்டட்” ("We regret to inform you that your application has been rejected") எனும் தகவல்கள் முகங்காட்டின. ஒருகட்டத்தில், பிப்ரவரி 2018-ல் எல்லாம், “உண்மையிலேயே நான் லாயிக்கில்ல தான் போல!” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு, இருக்கிற வேலையை விட முடியாது போலிருக்கிறது என்ற முடிவுக்கு வந்துவிட்டிருந்தபோதுதான், ‘டீச் ஃபார் இந்தியா ஃபெல்லோஷிப்’பிற்குத் (Teach For India Fellowship) தேர்வாகியிருப்பது தெரிய வந்தது.


தெம்புடன் சென்று மேலாளரின் முகத்திலறையும் தொனியில், “நான் மார்ச் மாத இறுதியில் வேலையை விட்டு விலகுகிறேன்” என்று சொன்னபோது இனம்புரியாத மகிழ்ச்சி. மனதில் உத்வேகம் கூடியிருந்தது. அவரது நடத்தை குறித்துப் பலமுறை புகார் செய்தும் கண்டுகொள்ளாத மனிதவளத் துறை சார்ந்தவர்களிடமும் விவரத்தைத் தெரியப்படுத்தினேன்.


2017-18 என்னைப் பொறுத்தவரையில் அழிக்கப்பட வேண்டிய காலம். ஆனால் ஒரு விஷயத்திற்காக அம்மேலாளருக்கும், நிறுவனத்துக்கும் கடமைப்பட்டுள்ளேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். என்னைச் சுயமரியாதைக்காரனாய் (’ஒடனே தூக்கினு வந்துட்டான்பா திராவிடத்த’ எனும் குரல் கேட்கிறது’; பிறகு பதில் சொல்லிக்கொள்ளலாம்) மாற்றியதில் பெரும்பங்கு வகித்தது என்னை வேலையை விட்டு விலகச் செய்த புண்ணியவான்களே ஆவர்.


ஆனால், 2018-2020 ஆகிய இரண்டு வருடங்களும் ‘டீச் ஃபார் இந்தியா’ அடையாளத்தின் கீழ் பணியாற்றியிருக்க வேண்டிய நான், 2019-ல் விலக நேர்ந்தது. ஏன்?


2018-19 கல்வியாண்டில் எனக்களிக்கப்பட்டது புது வண்ணாரப்பேட்டை செரியன் நகர் நகராட்சிப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு. அமைப்பின் விதிமுறைகளுக்கேற்ப நான் 2019-2020 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிற்குப் பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால், பத்தாம் வகுப்பு என்பது பொதுத்தேர்வு போன்ற முக்கியமான கட்டங்களைக் கொண்டிருப்பதால் நிரந்தர ஆசிரியர்களுக்கே அவ்வகுப்பு அளிக்கப்பட வேண்டுமென்பதும் விதிமுறை.


எனக்கு இரு வாய்ப்புகளிருந்தது.

1. ‘டீச் ஃபார் இந்தியா’ அமைப்பில் இருந்துகொண்டே வேறொரு வகுப்பிற்கோ, அல்லது வேறொரு பள்ளியிலோ பாடம் நடத்தலாம்.

2. அதே வகுப்பில்தான் பாடம் எடுப்பேன் என்று அடம்பிடித்தால், அமைப்பிலிருந்து விலகி, வேறு ஏதேனும் வழிமுறைகளைக் கையாண்டு பத்தாம் வகுப்பிற்கு ஆசிரியனாய் இருத்தல்.

நான் முதல் வாய்ப்பைத் தவிர்த்து, இரண்டாவதைக் கையிலெடுத்தேன். காரணம், ‘வாசிப்பு’. இதென்ன புதுக்கதை? அதென்ன ‘வாசிப்பு’? அதையெல்லாம் பின்னர் பார்க்கலாம்.


இத்தருணத்தில், இதைத்தான் நேர்காணல்களில் அவர்கள் professional inconsistency என்றழைத்தனர் என்று தெளிவுபடுத்த விழைகிறேன். அவர்களைப் பொறுத்தவரை, நல்ல ப்ரொஃபைல் (profile) என்பது அனைவரும் அறிந்த கொழுத்த நிறுவனங்களில் பணிபுரிவது. ஒரு மனிதனின் தொழில்முறை வாழ்வில் நிறுவனங்கள் மாறுவது என்பது யாரும் விளையாட்டாய்ச் செய்வதில்லை. ஆனால், அதற்கான விளக்கங்களை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லாத மேதகு மேலாண்மைக் கல்லூரிகளில் என்ன சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.


மேலும், பள்ளியில் பணியாற்றிய அவ்விரு ஆண்டுகளிலும் நான் சந்தித்த பலர், என்னுடன் நண்பர்களாகவே இருந்த மேலும் பலர் என்னைப் பின்வரும் இரு கோணங்களில் ஒன்றில் வைத்தே பார்த்தனர்.

1. ‘பைத்தியக்காரன், நல்ல காசு குடுக்குற வேலைய விட்டுட்டு, சம்மந்தமே இல்லாம எங்கேயோ போய்ட்டு குப்ப கொட்டிட்டிருக்கான்’ - உதவாக்கரை பிம்பம்

2. ‘ப்பா... பெரிய ஆளுப்பா இவன். நல்ல வேலைய விட்டுட்டு டப்புனு மாறிப் போறதுக்கெல்லாம் பெரிய தைரியம் வேணும்’ - அதிநாயகப் பிம்பம்


இவற்றையெல்லாம் தாண்டி என் பெற்றோருக்குமே கூட, நான் 2018-ல் திடீரென்று புதியதோர் பணிக்குச் சென்றபோது ஆச்சரியமும், அதிருப்தியும் மிகுந்திருக்கும் என்பது நிதர்சனம். ‘செரி, இவன் செஞ்சா செரியாத்தான் இருக்கும்’ என்ற ரீதியில் தைரியம் கொடுத்திருக்கும் அவர்களுக்கும், 2018-2020 ஆண்டுகளில் கற்றவை, பெற்றவை, இழந்தவை, கொடுத்தவை இவை போக ‘நான் கண்ட மனிதர்கள்’ என்ற பல்வேறு பரிமாணங்களை விளக்குவது அவசியமாகிறது.


சமீபத்தில் கூட நண்பனொருவன் ‘எப்புடியோ மச்சி. எங்கெங்கேயோ சுத்திட்டு ஃபைனலா எம்.பி.ஏ. பண்ணணும்னு முடிவு பண்ணிட்ட. ஒரு வேளை உன் ப்ரொஃபைல இம்ப்ரூவ் பண்றதுக்குத்தான் இந்த சோஷியல் சர்வீஸ்லாம் பண்ணுனியோ?’ என்று நக்கலாகக் கேட்டான். அதற்கான விளக்கமாகவும் இத்தொடர் இருக்கும் என நம்புகிறேன்.


எத்தனைப் பகுதியாக எழுதப் போகிறேன், எதை எழுத வேண்டும் எதை விட வேண்டும் என்ற எவ்விதத் தெளிவும் இல்லை. அவ்வாறிருத்தலே நலம் என்றெண்ணுகிறேன். இதுவரை நான் எடுத்த முடிவுகள் பல ஆழ்ந்து சிந்தித்து, சிலாகித்து, விவாதித்து, கலந்தாலோசித்து எடுக்கப்பட்டவை அல்ல. இன்றியமையாத் தேவையினால் எனக்களிக்கப்பட்டவை. அதன் சாதக, பாதகங்களுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்கும் பக்குவம் எனக்கு வந்துவிட்டதாக உணர்கிறேன்.


‘எண்ணித் துணிக கருமம்’ எனும் கூற்று எனக்கு உவப்பானதல்ல. படிப்படியாக, நொடிநொடியாகத் திட்டமிட்டு நான் செயலில் இறங்கிய பல காரியங்களை விட, கணப்பொழுதில் முடிவெடுத்த முன்னெடுப்புகளே என்னைச் செலுத்தியிருக்கின்றன. மேலும், திட்டமிட்ட பல காரியங்கள் உடனே செயல்கூடியதுமில்லை. அவ்வகையில் திட்டங்கள் ஏதும் இல்லாத இத்தொடரும் முழுமை பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


தொடக்கத்தில் குறிப்பிட்ட மூன்று குழப்பங்களுக்கு விடைகளாக எனக்கு நானே சொல்லிக்கொண்டவை.

1. மொத்தமாக எழுதி ஒரேயடியாகப் பதிவிட விருப்பமில்லை. நீளம் கருதிப் பலர் படிக்காமல் போவதற்கான வாய்ப்புகளே அதிகம் (ஏற்கனவே, 50 பேருக்கு அனுப்பினால் 5 பேர் படித்தால் அதுவே அதிசயம்.) என்னை நானே உந்திக்கொண்டு பெரிய ஒரு தொகுப்பாக இதை எழுதிவிட முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை. அவ்வப்போது ஓரிரு பகுதிகளைப் படித்துவிட்டு எவரேனும், “தொடர்ந்து எழுது” என்று சொல்வது வேகத்தைக் கொடுக்கும் என்பது எண்ணம்.

2. எளிதான பதில். தமிழில் எழுதுவது எளிது. பல பகுதிகளில் கோபம், வருத்தம், ஆற்றாமை போன்ற உணர்வுகள் இடம்பெறுமாயின், அவற்றை வெளிப்படுத்துவதற்குத் தமிழே சரியானது. அவ்வளவு ஆங்கிலப் புலமை பெறவில்லை இன்னும்.

3. வரலாறெனச் சொல்லுமளவிற்கு உபயோகமானதானதை மட்டுமே எழுத வேண்டுமெனில் இவ்வலைப்பூவில் இருக்கும் அத்தனைப் பதிவுகளையும் நீக்க வேண்டியிருக்கும். எழுதத் தொடங்கியிருக்கும் இத்தொடர் என்னளவில் என் வாழ்வின் முக்கியமான இரு ஆண்டுகள் குறித்த பதிவுகளாக இருக்க வேண்டும், இருக்கும்.


தினம் ஒரு பகுதியாக எழுத முடியுமா என்று தெரியவில்லை. ஓரிரு நாட்களுக்கொருமுறையேனும் எழுதிவிட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.


**********


தொடரின் பிற பகுதிகளைப் படிக்க:


#2 - ஆசான், சென்ன வட சென்ன, செரியன் நகர் & அரத்தூண் ரோட் @ நியூ மார்க்கெட் ஃபார்ம்

#3 - முதல் நாள் இன்று, எதுவோ ஒன்று...