Sunday, June 27, 2021

கரை வந்த பிறகே | #2 - ஆசான், சென்ன வட சென்ன, செரியன் நகர் & அரத்தூண் ரோட் @ நியூ மார்க்கெட் ஃபார்ம்

 முன்குறிப்பு:

1. முதல் பகுதியைப் படிக்க, இங்கு சொடுக்கவும்

2. ஜெயமோகன் விசிறிகளுக்கு: இங்கு ‘ஆசான்’ என்பது அவரைக் குறிக்கும் சொல்லல்ல.


**********


ஜூன் 2, 2018


முதல் நாள் இரவுதான் சென்னைக்கு வந்திருந்தேன். புதுவண்ணாரப்பேட்டையில் வாடகைக்கு வீடெடுக்கும் வரை ‘டீச் ஃபார் இந்தியா’வில் வேலை செய்த நண்பர் ராம்பிரசாத்தின் வாடகை வீட்டில், சாலிக்கிராமத்தில் ஜாகை. இரவு உண்ட ’கோவை சாவித்திரி மெஸ்’  மசால் தோசையும், சப்பாத்திகளும் அருமையான உறக்கத்தை அளித்துவிட்டிருந்தன.


ஜூன்3-ஆம் தேதியே பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு திறப்பதாக இருந்தாலும், ஜூன்2 அன்றே ஒருமுறை பள்ளிக்குச் சென்றுவிட வேண்டுமென்ற நிலைமை. ”நிலைமையா? அப்போ நீயா முடிவெடுக்கலையா? யாரோ வற்புறுத்தி பள்ளிக்கு ஒரு நாள் முன்னாலயே வரணும்னு கட்டாயப்படுத்துன மாதிரி சொல்ற?” என்ற கேள்விக்கு எனது பதில், “ஆம்”. என்னை வரச் சொல்லியிருந்தவர் ஆசான் (’மெண்டார்’ எனும் ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் அதுவே என நினைக்கிறேன். ‘ஆசிரியர்’ என்று சொன்னால் ‘டீச்சர்’ என்று பொருள்படுகிறது; ’வழிகாட்டி’ என்பது ‘கைட்’ என்றாகிவிடுகிறது) பாலசுப்ரமணியன் (எ) பாலா.


**********


ஐந்து வார ‘ட்ரெய்னிங்’-ன்போதே இவரைப் பற்றிய பலவாறான கருத்துக்களைச் செவிவழிச் செய்திகளாய் அறிந்திருந்தேன்.

1. “2012 தொடங்கி 2014 வரைக்கும் ஃபெல்லோவா இருந்தவரு. அதுக்கப்புறம் வேற வேலைக்கெல்லாம் போகாம அவரு க்ளாஸ் பசங்களப் படிக்க வைக்கறதுக்காக ஃபுல் டைம் அதே ஸ்கூல்லயே வேலை செய்யுறார்”

2. “அவருகிட்ட அளவா வெச்சிக்கோ. புதுசா வர்றவங்கள அடக்கி அவரு வழிக்குக் கொண்டுபோயிடுவாரு”

3. “பசங்கள அநியாயத்துக்கு அடிப்பாரு. அதெல்லாம் க்ரைம். ரௌடித்தனமா நடந்துப்பாரு நீதான் க்ளாஸ்ல ஒரு ஸ்டெபிலிட்டி கொண்டு வரணும்”

இத்தகைய துணுக்குகள் எனக்கு மிரட்சியை ஏற்படுத்தியிருந்தன.


ஏப்ரல் 27, 2018 அன்று புனே நகரில் தொடங்கிய ‘ட்ரெய்னிங்’கில் இருந்த எனக்கு, பல்வேறு சந்தேகங்கள் இருந்தன. முந்தைய நிறுவனத்தில் இருந்ததுபோலன்றி சற்றே வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மனத்தில் நிலைபெற்றிருந்தது. அவ்வப்போது வழிகாட்டிகளிடமும், ட்ரெய்னர்களிடமும் எதிர்க்கேள்விகள் கேட்டு வாயைக்கொடுத்து அனைவரிடமும் வாங்கிக்கட்டிக் கொண்டிருந்தேன். எனக்கு ‘டீச் ஃபார் இந்தியா’வில் சொல்லித் தரப்பட்ட வழிமுறைகளின் மேல் பெரிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கவில்லை. யாரிடம் சொல்லித் தெளிவுபடுத்திக்கொள்வது என்றும் தெரியவில்லை.


மே மாதம் மூன்றாவது வாரத்தில் ஒவ்வொருவரும் எந்தப் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு வந்தது. எனக்கு அளிக்கப்பட்ட பள்ளியின் பெயர் ’நியூ மார்க்கெட் ஃபார்ம்’. விநோதமான பெயராக இருந்தது. அப்போது உடனிருந்த மேற்குறிப்பிட்ட ‘சாலிக்கிராமத்து நண்பர்’ “ஓ என்.எம்.எஃப்.-ஆ? சூப்பர். பாலாண்ணா ஸ்கூல். செம்மையா இருக்கப் போகுது” என்று சிரித்தார். அதன்பிறகே, மேற்சொன்ன மூன்று துணுக்குகளையும் பலரிடமிருந்து கேட்க நேர்ந்தது.


”எங்கடா கால விட்டிருக்கேன் நானு?” என்று எனக்குள்ளாகவே கேட்டுக்கொண்டிருந்தேன். பயங்கர குழப்பமான மனநிலையில் தலை வெடித்துக்கொண்டிருந்தது. “புலி கிட்டயிருந்து தப்பிக்கிறேன்னு சிங்கத்துகிட்ட மாட்டிக்கிட்டேனோ?” என்று நடுங்கிக்கொண்டிருந்தேன். இருவிதமான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

1. முதல் வேலையில் பதுங்கியது போலன்றி, சண்டைக்காரனாக மாறி எனக்கான வெளியை நானே உருவாக்கிக் கொள்வது.

2. ’சண்டைக்காரனாக மாறி, கேள்விகள் பல கேட்கத் தொடங்கிவிட்டால், இங்கும் வேலை போய்விடுமோ?’ என்ற எதிர்க்கேள்வி.


இத்தகைய குழப்பங்களுக்கிடையில்தான் மே மூன்றாம் வாரத்தில் என் வாட்ஸாப்பிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. “ஹாய் கிரி, திஸ் இஸ் பாலா. ஐ வொர்க் அட் என்.எம்.ஃப். ஆஸ் அ சீ.ஈ.ஜீ. அலம், ஐயம் க்ளாட் டு வொர்க் வித் அ ஃபெல்லோ சீ.ஈ.ஜீ.-இயன்.” ("Hi Giri, this is Bala. I work at NMF. As a CEG alum, I am glad to work with a fellow CEGian") சீ.ஈ.ஜீ. என்பது காலேஜ் ஆஃப் இஞ்சினியரிங் கிண்டி. அதாவது கிண்டி பொறியியல் கல்லூரி. அவர் 2002-ல் ஈ.சீ.ஈ. படித்தவர் என்று பின்னர் அறிந்தேன். குறுஞ்செய்திக்குப் பதிலெதுவும் அனுப்பவில்லை.

அதற்கடுத்த நாள் ராம்பிரசாத் தன் கைப்பேசியை எடுத்து வந்து நீட்டினார். “லைன்ல பாலாண்ணா. உன் கிட்டப் பேசணுமாம்.” எனக்கு அவரிடம் பேச வேண்டுமென்ற விருப்பம் பெரிதாக இல்லையெனினும், வேலையனைத்தையும் விட்டுவிட்டுப் பள்ளியில் மாணவர்களைப் படிக்க வைப்பதற்கான முனைப்புடன் செயல்படுகிறார் என்ற செய்தி அவர்மீது மரியாதையை உருவாக்கியிருந்தது.


“ஹலோ?”

”ஹலோ! நான் பாலா பேசுறேன். என்னப்பா, எப்புடி இருக்க?” - குரலில் ஒரு கம்பீரம்.

“ஹாய் பாலா, நல்லா இருக்கேன். நீங்க?” - தயங்கித் தயங்கியே பேசினேன். ‘பெரிய ஆளு கிட்ட பேசிட்டிருக்கோம்’ என்ற பிம்பம் மனதில் பதியத் தொடங்கி விட்டிருந்தது.

“குட் பா. எப்புடிப் போயிட்டிருக்கு ட்ரெய்னிங்லாம்?” - அவர் கேட்ட தொனியிலேயே கிண்டல் தொனித்தது. என்னிடம் ஏதோ பதிலை எதிர்பார்த்துக் கேட்பது போலவே இருந்தது.

“ம்... பரவாயில்லைங்க. போகுது.” - உடனே இப்படியோ, அப்படியோ பதில் சொல்லி மாட்டிக்கொள்ள வேண்டாமே என்று பொத்தாம்பொதுவாக ஒரு பதிலைச் சொல்லி மழுப்ப முயன்றேன். ஆனால், ட்ரெய்னிங்கில் ஏதோ சரியில்லை என்று சொல்லி, அவரது கருத்தைக் கேட்க வேண்டுமெனத் தோன்றியது.

“நல்லா இல்லையா?” - என் எண்ணவோட்டத்தை எனது குரல் அவருக்கு அறிவித்திருக்க வேண்டும். தெள்ளத்தெளிவாகக் கேட்டார்.

“இல்ல. அப்புடி இல்ல. நான் ஸ்கூல் படிக்கும்போது என் டீச்சர்ஸ்லாம் இப்புடி க்ளாஸ் எடுத்ததில்ல. இவங்க சொல்ற மாதிரி லெஸன் ப்ளான் (Lesson Plan), இண்டிப்பெண்டண்ட் ப்ராக்டீஸ் (Independent Practice) அப்புடின்னு எல்லாம் பிரிச்சு க்ளாஸ் எடுத்தா நைன்த் ஸ்டாண்டர்ட் போர்ஷன்ஸ் முடிக்க முடியுமான்னு ஒரு டவுட் இருக்கு...” - இழுவையுடன் முடித்தேன். ஆனால் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.

“அவங்க சொல்றதெல்லாம் கேட்டுக்கோ. இங்க வரும்போது நீயே புதுசா நெறைய கத்துப்ப” - எனக்கு ஆறுதலளிப்பதற்காகச் சொல்கிறார் என்று நினைத்தேன். இரண்டு வருடங்கள் அவருடன் பண்ணியாற்றுவதில் எனது கல்வி சார்ந்த பார்வை குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் நிறைய கற்றுக்கொள்வேன் என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

“ஒகே பாலா. நான் உங்க நம்பர் ராம் கிட்ட வாங்கிக்குறேன். டவுட்ஸ் இருந்தா மெசேஜ் பண்றேன்.” - அவரிடம் உரையாடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என உண்மையிலேயே முடிவெடுத்திருந்தேன்.

“நல்லது பா. ஆல்ஸோ, வெல்கம் டு என்.எம்.எஃப்.” - என்.எம்.எஃப். என்பது நியூ மார்க்கெட் ஃபார்ம் என்பதன் சுருக்கம்.

“தேங்க்ஸ் பாலா. லுக்கிங் ஃபார்வர்ட்.”


பேசி முடித்த பின்னர் சற்றே தெளிவு பிறந்திருந்தது. “அவங்க சொல்றதெல்லாம் கேட்டுக்கோ. இங்க வரும்போது நீயே புதுசா நெறைய கத்துப்ப” என்ற சொற்களின் அர்த்தம் நன்றாகவே புரிந்தன. நடைமுறையில், தினம் தினம் வகுப்பறையில் நான் கற்க வேண்டிய விஷயங்கள் அதிகமானவை எனும் நினைப்பு சென்னைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகமாக்கியது.


சட்டென நினைவு வந்தவனாய், “ஐயையோ! அவர்கிட்ட முக்கியமான விஷயத்தக் கேக்க விட்டுட்டேனே!” என்றெண்ணிக்கொண்டு அவருக்கு வாட்ஸாப் செய்தேன். “ஹாய் பாலா. ஸாரி, கேக்கணும்னு நினைச்சேன். அங்க நீங்க க்ளாஸ்க்கு லெஸன் ப்ளான்லாம் எப்புடி பண்ணுவீங்க?”

அவர் அன்று சொன்ன பதில் இன்றும் தெளிவாய் நினைவிருக்கிறது. “வீ டோண்ட் ப்ளான் பா. வீ ஜஸ்ட் விங் இட்.” ("We don't plan pa. We just wing it.") அப்பதிலைப் படித்தவுடன் உப்பில்லாத சோற்றைத் தின்றதுபோலாகிவிட்டது. ஏனோ அதில் ஒரு உத்வேகமே இல்லாதது போலத் தோன்றியது. ‘என்னடா இந்த மனுஷன்! அவ்ளோ சின்சியர்னு சொல்றாங்க? இவ்ளோ வருஷமா வேல வெட்டி எல்லாம் விட்டுட்டு வந்துருக்காரு ஸ்கூலுக்கு ப்ளான் கூட பண்ணாமக் க்ளாஸ் எடுப்பாரா? இன்சின்சியரான ஆளா இருக்காரே!’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அவர் சொன்னதன் பொருள் அது அல்ல; ‘எவ்வளவுதான் திட்டமிட்டாலும் ஒரு வகுப்பென்பது நாம் எதிர்பார்த்தபடி செல்லாது.’ - இதுதான் உண்மையான பொருள் என்பதைப் பின்னர் அனுபவத்தில் அறிந்தேன். அதையெல்லாம் எப்படியும் பின்னால் பார்க்கத்தானே போகிறோம்!?


**********


மறுபடியும் ஜூன் 2-ஆம் தேதிக்கு வருவோம்.


”பாலாண்ணா கோடம்பாக்கம் ஸ்டேஷன்ல 7.30 மணிக்கு வெயிட் பண்றேன்னு சொல்லிருக்காரு. நான் ஜிம் போயிட்டு வந்து உன்ன ஸ்டேஷன்ல ட்ராப் பண்ணிடுறேன். அவர் கூடவே ஸ்கூலுக்குப் போயிடு.” - ராம்பிரசாத் என்னை எழுப்பி இதைச் சொல்லும்போது காலையில் மணி 6. அரைத்தூக்கத்தில் நான் “செரி, ராம். நீங்க போயிட்டு வாங்க. ஐ வில் பீ ரெடி” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தூங்க முயன்றேன். “டேய், அவர் கொஞ்சம் சீரியஸான ஆளு. டைம் ரொம்ப எதிர்பாப்பாரு. நீ பாட்டுக்கு தூங்கிட்டு லேட் ஆக்கிடாத” என்று ஒருமுரைக்கிருமுறை ராம் சொல்லவே, நான் கடுப்பானேன்.


“நாளைக்குத்தான் ராம் ஸ்கூலே. இவரென்ன இன்னைக்கு வர சொல்றாரு? செரி போங்க, ரெடி ஆகுறேன்” என்றபடி படுக்கைத் துணிகளை மடித்து வைக்கத் தொடங்கினேன்.


சொன்னபடி 7.30க்கு அவர் வந்துவிட்டார் போல. என்னை கோடம்பாக்கம் ரயில் நிறுத்தத்தில் விட்டுவிட்டுப் படியேறி வந்து பாலாவிற்கு அறிமுகம் செய்துவிட்டுக் கிளம்பினார் ராம். இறுக்கமான, நம்பிக்கை கொடுக்கும் கைக்குலுக்கலுடன் தொடங்கியது பாலாவுக்கும் எனக்குமான முதல் உரையாடல்.

”என்னப்பா கடலூர்ல இருந்து எப்போ சென்னை வந்த?”

“நேத்தைக்கு ராத்திரி, பாலா” - பெயரழைத்துக் கூப்பிடலாம் என்ற ஒரு நல்ல விஷயத்தை மட்டும் ஐ.டி. நிறுவனம் எனக்குக் கற்றுக்கொடுத்திருந்தது.

“ட்ராவல்லாம் ஓகேவா?”

“ஹ்ம்ம். ஆல் குட் பாலா.”

“என்ன சொல்றான் ராம்?” - இந்தக் கேள்வி வம்புக்கானதா, அல்லது உண்மையிலேயே ஏதேனும் பதில் சொல்ல வேண்டுமா என்று தெரியவில்லை.

“ஸ்கூலுக்கு ஒரு நாள் முன்னாடியே போறது நல்லதுன்னு சொன்னாரு” என்று கூச்சமே படாமல் பொய் சொன்னேன்.

7.40-க்கு ரயிலேறினோம். ”இதான்பா நம்ம ரூட். நான் பொதுவா நுங்கம்பாக்கம் ஸ்டேஷன்ல ஏறுவேன். என் வீடு சூளைமேடுல இருக்கு. ஸோ எனக்குப் பக்கம். இன்னைக்கு உனக்கு ஃபர்ஸ்ட் டைம்ன்றதுனால வந்தேன். கோடம்பாக்கம் - நுங்கம்பாக்கம் - சேத்பேட் - எக்மோர் - பார்க் - ஃபோர்ட் - பீச்; இதான்பா ஸ்டேஷன்ஸ். ஸோ உனக்குக் கோடம்பாக்கத்துல ஏறுனா ஆறாவது ஸ்டேஷன். எப்புடியும் அதான் லாஸ்ட். ஸோ பயப்பட வேணாம்.”

அவர் சொல்வது பெரிதாகக் கவனம் ஈர்க்கவில்லை. எனக்கு “நீங்க ஏன் வேலைய விட்டுட்டு இதைய உங்க தோள்ல இழுத்துப் போட்டுட்டு செய்யுறீங்க? உங்களுக்கு எங்க இருந்து வருது காசு? ஏன் உங்களுக்கும் ‘டீச் ஃபார் இந்தியா’க்கும் வாய்க்காத் தகராறு?” என்று பல கேள்விகளைக் கேட்க வேண்டுமென்று தோன்றியது.

“அதென்னங்க ஸ்கூலுக்குப் பேரு நியூ மார்க்கெட் ஃபார்ம்?” - முக்கியமான கேள்விகளை அவரிடம் நன்றாகப் பழகியபின் கேட்டுக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

“அங்க பெரிய சந்தை இப்பவும் உண்டுப்பா. மார்க்கெட் சந்துன்னே ஸ்கூல் பக்கத்துல இருக்கு. ஆக்சுவலா ஸ்கூலோட ஃபுல் பேரு ’சென்னை ஹை ஸ்கூல் - அரத்தூண் ரோட் @ நியூ மார்க்கெட் ஃபார்ம்’” - அவரிடம் மார்க்கெட் ஃபார்ம் தொடர்பான பின்கதைகள் இருக்கும் என்று பட்டது. ஆனால் அதைவிட சுவாரசியமான ஒரு செய்தியைத் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது.

”அதென்னங்க ஸ்கூல் பேருல @ சிம்பல்லாம் வருது?” - சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் ஏதோ உறுத்தலாக இருக்கவே கேட்டுவிட்டேன்.

“ஓ அதுவா? நம்ம ஸ்கூல் வெறும் நியூ மார்க்கெட் ஃபார்மாத்தான்பா இருந்துச்சு. அது ஒரு மெர்ஜர். ராயபுரத்துல அரத்தூண் ரோடுன்னு ஒண்ணு இருக்கு. அங்க இருக்குற ஒரு ஸ்கூல் நம்ம ஸ்கூலோட மெர்ஜ் ஆனதுனால தான் ‘அரத்தூண் ரோட் @ நியூ மார்க்கெட் ஃபார்ம்’.” - விளக்கம் திருப்திகரமாக இருந்தது.

“ஏன் மெர்...?” - கேள்வியை நான் முடித்திருக்கவில்லை. அவர் அதை எதிர்பார்த்திருக்க வேண்டும்.

“நெறைய ரீஸன்ஸ் இருக்கலாம்பா. ஸ்டாஃப் ஷார்ட்டேஜ், ஸ்டூடண்ட்ஸ் நெறைய பேரு ட்ராபவுட் ஆகுறது அப்புடின்னு.”

தலையாட்டிக்கொண்டே இருந்தேன். அவர் பேசி முடித்திருந்தார். அதை உணர்ந்தவனாய் ஜன்னல் வழியாக வெளியே பார்க்கத் தொடங்கினேன். அவரே கேட்டார். “நார்த் சென்னை இதுக்கு முன்னாடி வந்திருக்கியாப்பா?” - என்ன பதில் வரும் என்று அவருக்கு சர்வநிச்சயமாகத் தெரிந்திருக்கும்.

“இல்ல பாலா. கடைசி அஞ்சு வருஷமா சென்னையில தான் இருந்திருக்கேன். காலேஜ் நாலு வருஷம் அப்புறம் திருவான்மியூர்ல ஒரு வருஷம் தங்கியிருந்தேன் போன வேலைக்காக. ஆனா இந்தப் பக்கம் வந்ததில்ல.” - பதிலேதும் சொல்லவில்லை அவர். ஆனால் பொதுவாக ஒரு புன்னகையை உதிர்த்தார்.


கடற்கரை நிலையம் வந்துவிட்டிருந்தது. இறங்கி நடைமேடையில் நடந்து பஜார் பக்கம் இருந்த சப்வேயில் இறங்கி மறுபுறம் சென்று ஷேர் ஆட்டோவிற்காக நின்றோம். ஹெச்.எஸ்.பீ.சீ. வங்கிக் கட்டடம் பளிச்சென்ற வெள்ளை நிறத்தில் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. “பஸ்ஸும் கெடைக்கும் பா. ஆனா நெறைய கூட்டம் இருக்கும். க்ளாஸ்க்குப் போகும்போதே வேர்த்து ஊத்திரும். ஆட்டோன்னா உக்காந்து போகலாம்.” என்றார்.


வந்த ஷேர் ஆட்டோவில் “சோலாஸ்” என்றார். ஓட்டுநர் தலையசைத்தவுடன் அமர்ந்தோம். ”அதென்னங்க ‘சோலாஸ்’?” என்றேன். “நாம எறங்க வேண்டிய பஸ் ஸ்டாப் பேறு என்.4 பா. என்.4 போலீஸ் ஸ்டேஷன் இருந்ததுனால அந்த ஸ்டாப்புக்குப் பேரு அப்புடி. ஆனா அங்க எறங்குனா ஸ்கூலுக்குக் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா நடக்கணும். அதையத் தாண்டிக் கொஞ்ச தூரத்துல ஸ்வாலோஸ் எஸ்டேட்னு (Swallows Estate) ஒரு எடம் இருந்துச்சு. அதுதான் பேச்சு வழக்குல சோலாஸ் ஆயிருச்சு” - இதுவரை அன்று நான் தெரிந்து கொண்ட எத்தனையாவது புதிய தகவல் அது என்று புரியவில்லை.


கடற்கரை நிலையத்தில் ஏறிய நாங்கள், ராயபுரம், கல்மண்டபம், காசிமேடு எல்லாம் கடந்து என்.4-ஐயும் தாண்டி, ‘சோலாஸில்’ இறங்கினோம். செரியன் நகர் மெயின் ரோடில் நடக்கும்போதுதான் கவனித்தேன். சாலையின் இருபுறங்களிலும் குறுக்குச்சந்துகள் பிரிந்துபிரிந்து சென்றன. ஒரு பக்கம் தேசிய நகர் ஒன்றாம் தெரு, இரண்டாம் தெரு, மூன்றாம் தெரு என்றும், மறுபக்கம் செரியன் நகர் ஒன்றாம் தெரு, இரண்டாம் தெரு, மூன்றாம் தெரு என்றும் பலகைகள் அடையாளம் காட்டின. அடைசலான வீடுகள். தண்ணீர்க்குடத்தை வைத்துக்கொண்டு பலர் நின்றுகொண்டிருந்தனர். தண்ணீர் லாரி ஒன்று நின்றிருந்தது. குடிநீர்ப் பகிர்வில் ஏதோ தகராறு நடக்கவே, வசைச்சொற்கள் மாறி, மாறி விழுந்தன. சட்டை போடாமல் வீட்டு வாசல்களிலும், வீதியின் ஓரத்திலும் ஒரு சிலர் பல்துலக்கிக் கொண்டிருந்தனர். வண்டிக்கடை ஒன்றில் பள்ளிச் சீருடை அணிந்து ஒரு கூட்டம் இட்லி வடை தின்றுகொண்டிருந்தது. பத்துப் பன்னிரெண்டு பேர் கொண்ட அக்குழுவில் திடீரென்று இரண்டு மூன்று பேர் பாலாவைப் பார்த்து விட்டுப் பள்ளி வளாகத்திற்குள் தெறித்து ஓடினர்.


சர்வ வல்லமை படைத்த, அனைத்தும் அறிந்த மேதாவியாய் உணர்ந்து பெருமிதத்துடன் பள்ளியின் விளையாட்டுத் திடலை ஒட்டியிருந்த வாயிற்கதவின் வழியே, ஏதோ அப்பள்ளியை மீட்டெடுக்க வந்த தேவதூதன் என்று என்னை நானே எண்ணிக்கொண்டு வலதுகால் எடுத்துவைத்தேன், அடுத்த ஒரு மாதத்தில் என் கர்வம் அனைத்தும் சின்னாபின்னமாகிச் சிதறிவிடும் என்றறியாமலேயே.


அரசுப் பள்ளியின் தற்காலிக ஆசிரியனாய் எனது முதல் நாள் தொடங்கவிருந்தது.


**********


மூன்றாம் பகுதியைப் படிக்க:

#3 - முதல் நாள் இன்று, எதுவோ ஒன்று...


Saturday, June 26, 2021

கரை வந்த பிறகே | #1 - அகர முதல

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இருபது முறையேனும் எழுத வேண்டுமென்று நினைத்தபடியோ, எழுதத் தொடங்கிய பின்னர் முடிக்காமலேயோ கிடப்பில் போடப்பட்டுக் கொண்டேயிருந்த பிறகு, இறுதியாக இன்று அமர்ந்தாகி விட்டது.


பொதுவாக, எழுத வேண்டும் என்றமர்ந்த பிறகு இவ்வளவு யோசித்துக் குழப்பிக் கொண்டதேயில்லை. ஆனால் இம்முறை எழுத வேண்டும் என்று எத்தனித்தது 2018-ல் இருந்து 2020 வரையிலான இரண்டு வருடங்களில் நான் என்ன பணி செய்தேன், என்ன கற்றேன் என்பது குறித்த ஒரு தன்னிலை விளக்கம்.


ஆரம்பத்திலேயே பல குழப்பங்கள்.

1. பல நாட்கள் தொடர்ச்சியாகத் தட்டச்சு செய்து, மிக நீண்ட பதிவாக மொத்தமாகப் பதிவிடலாமா? அல்லது, பல பகுதிகளாக அவ்வப்போது பதிவேற்றலாமா?

2. நிறைய பேர் படிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது என்பதற்காக ஆங்கிலத்தில் எழுதலாமா? அல்லது, சரளமாக வரும் தமிழில் எழுதலாமா?

3. வரலாற்றில் எழுதிப் பொன்னெழுத்துக்களால் பொறிக்கும் அளவிற்கு நான் எழுத எத்தனிப்பது உபயோகமானதா?


எனினும் இக்குழப்பங்கள் தாண்டி, சிற்சில நிகழ்வுகள் முக்கி முனகி என்னை எழுத வைத்திருக்கின்றன.

1. இளங்கலைப் படிப்பு முடித்து நான்கு வருடங்கள் சென்ற பிறகு, போதுமான வேலையனுபவத்துடன் மேலாண்மைக் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தபோது நான் தொடர்ச்சியாக எதிர்கொண்ட “நீ நிலையாக ஒரு வேலையில் இருந்திருக்கவில்லை. Your profile shows professional inconsistency” என்று தொடர்ச்சியாக என்னைக் குற்ற உணர்ச்சிக்குத் தள்ளிய மேதகு நேர்காணல் நடத்தியவர்கள். (பி.கு.: பல நிராகரித்தல்களுக்கும், சில ஒப்புதல்களுக்குமிடையே ஒருவழியாக ஒரு நல்ல மேலாண்மைக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது என்பது வேறு விஷயம்.)

2. தமிழக அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்பான “2 லட்சம் பள்ளி மாணவர்களுக்குக் கண் பரிசோதனை செய்யப்படும்” என்பது.

3. நண்பர்கள் பலர் 2019-ல் இருந்தே என்னுடைய வேலை அனுபவங்களைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று திரும்பத் திரும்பக் கூறி வந்தனர். வெவ்வேறு காரணங்களால் “பிறகு பார்க்கலாம்” என்ற அளவில் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். சமீபத்தில் 2018-2020 காலகட்டத்தில் என்னை வழிநடத்திய நபருடன் பேசுகையில், அவரும் “நாம அனுபவத்த எல்லாம் எழுதணும் பா” என்று சொல்லக்கேட்டு, அடியேனும் வேலை வெட்டியின்றி தண்டச்சோறு தின்று குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருக்கிறபடியால், எழுதலாமே என்று எண்ணம்.


மேற்சொல்லியபடியே, அப்படி நான் 2018 தொடங்கி 2020 வரையிலான இரண்டாண்டுகளில் அப்படியென்ன சாதித்து விட்டேன் என்று இந்த விளக்கம்? காரணம் இருக்கிறது. இடஞ்சுட்டிப் பொருள் விளக்குவதற்கு முன், சில விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது.


நான் கடலூரைச் சேர்ந்தவன். கிண்டி பொறியியல் கல்லூரியில் 2017-ஆம் ஆண்டு இயந்திரவியல் பிரிவில் படித்து முடித்து, ஐ.டி. நிறுவனமொன்றில் பணியாற்ற முனைந்தவன். உலக ஆன்றோர் சான்றோரால் ’பணிபுரிபவர்களைக் கண்ணியத்தோடு நடத்தும் நிறுவனம்’ என்று அன்போடு அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அவ்விடத்தில், எனக்கு அமைந்த மேலாளருக்கும் எனக்கும் வாய்க்கால் தகராறு. தகராறு என்றால் நான் ஏதோ அவரை எகிறிச் சென்று சட்டையைப் பிடித்துவிட்டேன் என்ற ஹீரோயிஸத் தகராறல்ல. “நீயெல்லாம் ஒரு ஆளா? உன்னையெல்லாம் எதுக்கு வேலைக்கு எடுத்தாங்க?” என்ற ரீதியில் தினம் காரணமேயின்றி அவரிடம் பேச்சு வாங்க நேர்ந்ததைத்தான் நாசூக்காகத் ‘தகராறு’ என்கிறேன்.


2017 ஜூன் 21-ஆம் தேதி தொடங்கிய அப்பணியிலிருந்து 2018 மார்ச் 30-ஆம் நாள் விலகினேன். சற்றேறக்குறைய 9 மாதங்கள்; அவ்வளவே. தினமும் வேலைக்குச் சென்று, தேவையில்லாமல் கூனிக் குறுகி நின்று, எதற்கும் லாயக்கில்லை என்று வசவுகளை வாங்கிப் பழகிப் போய்விட்டிருந்த எனக்கு, இழந்த என் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது. வேலையிடத்தில் வெற்று அவமானத்திற்கு மட்டுமே பழக்கப்பட்டிருந்த நான், எனக்கு என்னையே அடையாளப்படுத்திக் கொள்ள வழிகொடுக்கும் ஒரு வேலையை ஜனவரி 2018-ல் இருந்தே தேடத் தொடங்கிவிட்டிருந்தேன். ‘டாடா ட்ரஸ்ட்ஸ் ஃபெல்லோஷிப்’ (Tata Trusts Fellowship), ‘அஸீம் ப்ரேம்ஜி ஃபவுண்டேஷன் ஃபெல்லோஷிப்’ (Azim Premji Foundation Fellowship), ‘டேட்டா காப்ஸ்’ (Data Cops), ‘காந்தி ஃபெல்லோஷிப்’ (Gandhi Fellowship), ‘லாம்ப் ஃபெல்லோஷிப்’ (LAMP Fellowship) போன்ற இயல்பான கார்ப்பரேட் பணியிலிருந்து சற்றே மாறுபட்ட வேலைகளுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தேன்.


எதிர்பார்த்தது போலவே பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தன. மின்னஞ்சலைத் திறந்துபார்த்தாலே “வீ ரெக்ரெட் டு இன்ஃபார்ம் யூ தட் யுவர் அப்ளிக்கேஷன் ஹாஸ் பீன் ரிஜெக்டட்” ("We regret to inform you that your application has been rejected") எனும் தகவல்கள் முகங்காட்டின. ஒருகட்டத்தில், பிப்ரவரி 2018-ல் எல்லாம், “உண்மையிலேயே நான் லாயிக்கில்ல தான் போல!” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு, இருக்கிற வேலையை விட முடியாது போலிருக்கிறது என்ற முடிவுக்கு வந்துவிட்டிருந்தபோதுதான், ‘டீச் ஃபார் இந்தியா ஃபெல்லோஷிப்’பிற்குத் (Teach For India Fellowship) தேர்வாகியிருப்பது தெரிய வந்தது.


தெம்புடன் சென்று மேலாளரின் முகத்திலறையும் தொனியில், “நான் மார்ச் மாத இறுதியில் வேலையை விட்டு விலகுகிறேன்” என்று சொன்னபோது இனம்புரியாத மகிழ்ச்சி. மனதில் உத்வேகம் கூடியிருந்தது. அவரது நடத்தை குறித்துப் பலமுறை புகார் செய்தும் கண்டுகொள்ளாத மனிதவளத் துறை சார்ந்தவர்களிடமும் விவரத்தைத் தெரியப்படுத்தினேன்.


2017-18 என்னைப் பொறுத்தவரையில் அழிக்கப்பட வேண்டிய காலம். ஆனால் ஒரு விஷயத்திற்காக அம்மேலாளருக்கும், நிறுவனத்துக்கும் கடமைப்பட்டுள்ளேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். என்னைச் சுயமரியாதைக்காரனாய் (’ஒடனே தூக்கினு வந்துட்டான்பா திராவிடத்த’ எனும் குரல் கேட்கிறது’; பிறகு பதில் சொல்லிக்கொள்ளலாம்) மாற்றியதில் பெரும்பங்கு வகித்தது என்னை வேலையை விட்டு விலகச் செய்த புண்ணியவான்களே ஆவர்.


ஆனால், 2018-2020 ஆகிய இரண்டு வருடங்களும் ‘டீச் ஃபார் இந்தியா’ அடையாளத்தின் கீழ் பணியாற்றியிருக்க வேண்டிய நான், 2019-ல் விலக நேர்ந்தது. ஏன்?


2018-19 கல்வியாண்டில் எனக்களிக்கப்பட்டது புது வண்ணாரப்பேட்டை செரியன் நகர் நகராட்சிப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு. அமைப்பின் விதிமுறைகளுக்கேற்ப நான் 2019-2020 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிற்குப் பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால், பத்தாம் வகுப்பு என்பது பொதுத்தேர்வு போன்ற முக்கியமான கட்டங்களைக் கொண்டிருப்பதால் நிரந்தர ஆசிரியர்களுக்கே அவ்வகுப்பு அளிக்கப்பட வேண்டுமென்பதும் விதிமுறை.


எனக்கு இரு வாய்ப்புகளிருந்தது.

1. ‘டீச் ஃபார் இந்தியா’ அமைப்பில் இருந்துகொண்டே வேறொரு வகுப்பிற்கோ, அல்லது வேறொரு பள்ளியிலோ பாடம் நடத்தலாம்.

2. அதே வகுப்பில்தான் பாடம் எடுப்பேன் என்று அடம்பிடித்தால், அமைப்பிலிருந்து விலகி, வேறு ஏதேனும் வழிமுறைகளைக் கையாண்டு பத்தாம் வகுப்பிற்கு ஆசிரியனாய் இருத்தல்.

நான் முதல் வாய்ப்பைத் தவிர்த்து, இரண்டாவதைக் கையிலெடுத்தேன். காரணம், ‘வாசிப்பு’. இதென்ன புதுக்கதை? அதென்ன ‘வாசிப்பு’? அதையெல்லாம் பின்னர் பார்க்கலாம்.


இத்தருணத்தில், இதைத்தான் நேர்காணல்களில் அவர்கள் professional inconsistency என்றழைத்தனர் என்று தெளிவுபடுத்த விழைகிறேன். அவர்களைப் பொறுத்தவரை, நல்ல ப்ரொஃபைல் (profile) என்பது அனைவரும் அறிந்த கொழுத்த நிறுவனங்களில் பணிபுரிவது. ஒரு மனிதனின் தொழில்முறை வாழ்வில் நிறுவனங்கள் மாறுவது என்பது யாரும் விளையாட்டாய்ச் செய்வதில்லை. ஆனால், அதற்கான விளக்கங்களை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லாத மேதகு மேலாண்மைக் கல்லூரிகளில் என்ன சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.


மேலும், பள்ளியில் பணியாற்றிய அவ்விரு ஆண்டுகளிலும் நான் சந்தித்த பலர், என்னுடன் நண்பர்களாகவே இருந்த மேலும் பலர் என்னைப் பின்வரும் இரு கோணங்களில் ஒன்றில் வைத்தே பார்த்தனர்.

1. ‘பைத்தியக்காரன், நல்ல காசு குடுக்குற வேலைய விட்டுட்டு, சம்மந்தமே இல்லாம எங்கேயோ போய்ட்டு குப்ப கொட்டிட்டிருக்கான்’ - உதவாக்கரை பிம்பம்

2. ‘ப்பா... பெரிய ஆளுப்பா இவன். நல்ல வேலைய விட்டுட்டு டப்புனு மாறிப் போறதுக்கெல்லாம் பெரிய தைரியம் வேணும்’ - அதிநாயகப் பிம்பம்


இவற்றையெல்லாம் தாண்டி என் பெற்றோருக்குமே கூட, நான் 2018-ல் திடீரென்று புதியதோர் பணிக்குச் சென்றபோது ஆச்சரியமும், அதிருப்தியும் மிகுந்திருக்கும் என்பது நிதர்சனம். ‘செரி, இவன் செஞ்சா செரியாத்தான் இருக்கும்’ என்ற ரீதியில் தைரியம் கொடுத்திருக்கும் அவர்களுக்கும், 2018-2020 ஆண்டுகளில் கற்றவை, பெற்றவை, இழந்தவை, கொடுத்தவை இவை போக ‘நான் கண்ட மனிதர்கள்’ என்ற பல்வேறு பரிமாணங்களை விளக்குவது அவசியமாகிறது.


சமீபத்தில் கூட நண்பனொருவன் ‘எப்புடியோ மச்சி. எங்கெங்கேயோ சுத்திட்டு ஃபைனலா எம்.பி.ஏ. பண்ணணும்னு முடிவு பண்ணிட்ட. ஒரு வேளை உன் ப்ரொஃபைல இம்ப்ரூவ் பண்றதுக்குத்தான் இந்த சோஷியல் சர்வீஸ்லாம் பண்ணுனியோ?’ என்று நக்கலாகக் கேட்டான். அதற்கான விளக்கமாகவும் இத்தொடர் இருக்கும் என நம்புகிறேன்.


எத்தனைப் பகுதியாக எழுதப் போகிறேன், எதை எழுத வேண்டும் எதை விட வேண்டும் என்ற எவ்விதத் தெளிவும் இல்லை. அவ்வாறிருத்தலே நலம் என்றெண்ணுகிறேன். இதுவரை நான் எடுத்த முடிவுகள் பல ஆழ்ந்து சிந்தித்து, சிலாகித்து, விவாதித்து, கலந்தாலோசித்து எடுக்கப்பட்டவை அல்ல. இன்றியமையாத் தேவையினால் எனக்களிக்கப்பட்டவை. அதன் சாதக, பாதகங்களுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்கும் பக்குவம் எனக்கு வந்துவிட்டதாக உணர்கிறேன்.


‘எண்ணித் துணிக கருமம்’ எனும் கூற்று எனக்கு உவப்பானதல்ல. படிப்படியாக, நொடிநொடியாகத் திட்டமிட்டு நான் செயலில் இறங்கிய பல காரியங்களை விட, கணப்பொழுதில் முடிவெடுத்த முன்னெடுப்புகளே என்னைச் செலுத்தியிருக்கின்றன. மேலும், திட்டமிட்ட பல காரியங்கள் உடனே செயல்கூடியதுமில்லை. அவ்வகையில் திட்டங்கள் ஏதும் இல்லாத இத்தொடரும் முழுமை பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


தொடக்கத்தில் குறிப்பிட்ட மூன்று குழப்பங்களுக்கு விடைகளாக எனக்கு நானே சொல்லிக்கொண்டவை.

1. மொத்தமாக எழுதி ஒரேயடியாகப் பதிவிட விருப்பமில்லை. நீளம் கருதிப் பலர் படிக்காமல் போவதற்கான வாய்ப்புகளே அதிகம் (ஏற்கனவே, 50 பேருக்கு அனுப்பினால் 5 பேர் படித்தால் அதுவே அதிசயம்.) என்னை நானே உந்திக்கொண்டு பெரிய ஒரு தொகுப்பாக இதை எழுதிவிட முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை. அவ்வப்போது ஓரிரு பகுதிகளைப் படித்துவிட்டு எவரேனும், “தொடர்ந்து எழுது” என்று சொல்வது வேகத்தைக் கொடுக்கும் என்பது எண்ணம்.

2. எளிதான பதில். தமிழில் எழுதுவது எளிது. பல பகுதிகளில் கோபம், வருத்தம், ஆற்றாமை போன்ற உணர்வுகள் இடம்பெறுமாயின், அவற்றை வெளிப்படுத்துவதற்குத் தமிழே சரியானது. அவ்வளவு ஆங்கிலப் புலமை பெறவில்லை இன்னும்.

3. வரலாறெனச் சொல்லுமளவிற்கு உபயோகமானதானதை மட்டுமே எழுத வேண்டுமெனில் இவ்வலைப்பூவில் இருக்கும் அத்தனைப் பதிவுகளையும் நீக்க வேண்டியிருக்கும். எழுதத் தொடங்கியிருக்கும் இத்தொடர் என்னளவில் என் வாழ்வின் முக்கியமான இரு ஆண்டுகள் குறித்த பதிவுகளாக இருக்க வேண்டும், இருக்கும்.


தினம் ஒரு பகுதியாக எழுத முடியுமா என்று தெரியவில்லை. ஓரிரு நாட்களுக்கொருமுறையேனும் எழுதிவிட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.


**********


தொடரின் பிற பகுதிகளைப் படிக்க:


#2 - ஆசான், சென்ன வட சென்ன, செரியன் நகர் & அரத்தூண் ரோட் @ நியூ மார்க்கெட் ஃபார்ம்

#3 - முதல் நாள் இன்று, எதுவோ ஒன்று...

Thursday, April 16, 2020

REIMAGINING GEORGE CARLIN DURING LOCKDOWN - Of Productivity, Privilege, Proteins, Politics, People, Poop and more

Prelude:
1)    I surfed the internet and could not find any show by George Carlin, where he discussed this productivity mania and other things in detail (There is one on Motivation and Self-Help). If there are any videos, I request the reader to share in comments.

2)    There will be a lot of Carlin’s usual choice of words, which are intentional. The idea is to make it as close to how he would have fumed at the current scenario, with special emphasis on the Indian context.

3)    If you are not aware of George Carlin’s body of work and his methods, it is better you do not continue reading. I cannot handle the seismic attacks of your moral outrage on grounds of my political incorrectness.

“Folks, you know, I predicted the sort of a super virus that turns your vital organs into liquid shit long ago. Way back, in fact. People ask me how I could come up with these so-called prophecies. I say, “Bullshit. You, you, you and you, and every son of a motherfucker do not understand what to eat are bound to contact a virus. And, most of all, you deserve to die.” Anyways, the world is in a state of ‘lockdown’, and there are all sorts of these buffoons lamenting all over social media about the sad state of issues. These fucking idiots are lamenting over everything. EVERYTHING. The issues they keep harping about are so diverse, so unrelated, and so unimportant, and are nothing more than an additional act of assumed self-importance. In fact, I do have a list of ‘em. For the sake of time, let’s keep it to one alphabet now – P. People. Poor. Proteins. Productivity. Positivity. Privilege. Poop. Piss. Pollution. I’m tellin’ ya, I’m tired of this. Lemme do this, folks. Let’s add these people to my already existing listof people who ought to be killed.

Let’s start with people. Yeah, these Eccentric, Posh, Couch Potatoes. The IT workers. Ah, they have started complaining about getting stranded at their homes. Jesus Christ! What did y’all do when you went about minding your own business at the offices? You were flying kites with carefully-strung strings at the terrace of your office building? Travelling all around the orbits of this solar system during work hours? These motherfuckers were so inure to their work schedule that Sundays used to be self-imposed work days for them, and now these buy-all-consume-all-buy-more-consume-more wastrels have become stranded? Tell me this, you smug brats. When was the last time you DID NOT order an item on Amazon, Flipkart, Snapdeal, BigBasket, Swiggy, Zomato and many more of these apps that target just this shopping mania, and of course, with that, your personal data? When was the last time you went out of your home for anything – ANYTHING – apart from going to work? Nasty lunatics. Never stepped out of their homes. EVER. Cocooned themselves in their own lockdown every single day at work by comfortably perching their unshaped Flubber-like asses in a cubicle, and are now complaining of this goddamn lockdown.

These people are better. The least they can do is to lament, and the most they can do is to lament. Lamenting appears to be a sectoral 24*7 job of all the IT workers, who suddenly seem to hate Zoom meetings, Hangout chats, email deliverables, Trello boards, Slack tasks, Calendar appointments, conference calls, remote troubleshooting and what not. Were you, in your supposed days of glory at work before lockdown, telecommuting in a sort of Hyperloop that another of these self-righteous Silicon Valley entrepreneurs – one Elon Musk – designed for ya, to communicate in person with your far-off client existing in yet another time zone in yet another part of this big, fat world? Actually, forget designing or implementing Hyperloop. What the fuck is he talking about anyway? Fuck you, Lamenting Lampoons. Fuck Elon. And fuck everybody, coming to think of it.

Then, there are these Productivity Freaks. I don’t understand this. If you wanted to be productive, the first thing any sensible person would do is to turn the goddamn internet off. Or even better, break the smartphone, laptop, iPad, Kindle, desktop, modem, charger and headsets into a thousand pieces, and if possible, use another smartphone to make a TikTok video of it. I‘m telling you, these fanatics are capable of doing those kinda shit. You know what I mean? Breaking plates and banging god-knows-what vessel and using them as pieces of sonic instruments are things that my reasonably well-functioning brain does not seem to comprehend as activities of sanity or vanity. These people are worried about not spending their time useful enough. Calm down, you living-by-the-second-mindful-motherfuckers. Calm the fuck down. Let’s face it. Searching for productivity memes in a ton of Facebook pages surely does not qualify in any sense as a trait towards your wannabe sense of productivity. You know what productivity means? Lemme tell y’all what my definition of productivity is. Eat more. Shit more. If ‘more’ is the buzzword of productivity in this consumerist horizon, why not?

Speaking of food and poop, there are these calorie-conscious, protein-famished prickheads. These hypocritical assholes cannot seem to take a moment off to savour food. They need pitch-perfect, Excel-tabulated calculations for the number and percentage of the different micro- and macro-nutrients present in each and every morsel of meal they eat. Because, their lifestyles have suddenly become sedentary, and they do not want to gain weight. BULLSHIT. First of all, when was your work, life and everything in between in life not sedentary? Second of all, people, people. Stop. If we were conscious enough about food, what initiated this virus in the first place, huh?

Oh yeah, I know. I know. Those are only Chinese people. Let me introduce you to another bunch of these Clusterfuck Circlejerks, who are just vying for an opportunity to shift the burden on someone else - Africans in China, Expats, Immigrants, Muslims, Minorities. Carl Linnaeus would feel like his taxonomy is, after all, nothing more than a pile of sulphur-intoxicated garbage, if he saw the way these smug, greedy elites classify sub-groups. Branch after sub-branch after nodes after groups after classes after families of bullshit. Factually, FACTUALLY, there are only seven known types of Coronaviruses. Four mildly infective ones. SARS. MERS. nCOV. There is no Chinese virus. No African-expat virus. And the classification of these people to pass the buck just does not seem to stop only with the virus. It’s everywhere. Religion, caste, sub-caste, cluster, origin, family tree, forefathers’ origin, gender, creed, tribe, linguistics and more. Can’t seem to get rid of this habit of taxonomy. Fuck you, Linnaeus.

This taxonomic vassalage is what brings us to one of the other important categories of people. The Privilege-paranoid Party-poopers. Rich, well-fed, fair-skinned preachers of privilege make me want to spit and puke and cough and sneeze and burp and fart; fuck the masks and fuck droplet transmission. “You are privileged enough to stay home”, you say? Then, I dare say, “Fuck you. You are privileged enough to not only stay home but also stay home and post that goddamn tweet.” Oh, Jesus! You know what privileged asses should do? Stay home, eat more and shit more, like I said. Or better, go and try helping the health care workers. Pleasure-inducing for your privileged existence? Let’s then see what your omnipresent, validation-seeking souls on social media have to say about the privileged service of your privileged ass. Lemme tell you why these people harp, folks. I’ll tell y’all. It’s because they are safely placed in their comfortable cocoons, and can’t get out of it even after lockdown. These are “workarounds” towards portrayals of self-righteousness.

Staying true to the brand of taxonomy, there is a subset of these privileged preachers. I call ‘em Positivity Pukers. You’ve probably seen one of ‘em, haven’t ya? These high-on-optimism sub-humans possess some urine-induced belief from a cow that lighting various oil lamps would send out a message of positivity, solidarity and kill the virus. Kill the virus, seriously? Going by that argument, you know what’s more efficient? Lighting your balconies, corridors, bedrooms, dresses, cosmetics, and kitchens along with those liquefied gas cylinders on fire. If the heat kills the virus, why refrain from giving in the best possible effort to that extent? You the wanting-to-shed-privilege-but-nevertheless-privilege-practicing demigod will probably give some work to a group of privilege-forbidden hapless construction workers in effectively razing the building down to the ground.

But oh folks, that creates another set of problems. If there is so much heat, there’s pollution. Oh, dear! These Pollution-protecting Pigmies would then come up with some bar graphs, pie charts, tabulations, number crunching big data projections and all kinds of gibberish forecasts and extrapolations to guilt-trip your actions into one of privilege. “You were privileged enough to pollute the earth even during moments of arson”. What would the seemingly conscious act of absolving yourself of your privilege entail then? You know what it entails, irrespective of what you do or don't? That you’re nothing but a selfish asshole.

Thank you, that’s been my time. Thank you, folks. Thank you.”

Thursday, March 5, 2020

எலியாட்ஸும் ராமும்

”மச்சான், சாரி டா. ஒரு ட்வெண்ட்டி மினிட்ஸ்ல வந்துடுறேன். கொஞ்சம் லேட்டாயிடுச்சு” என்ற நண்பனிடம், “ஒண்ணும் பிரச்சனையில்லடா, பொறுமையா வா” என்றபடி இணைப்பைத் துண்டித்தேன். மாதா கோயில் தொடங்கி முருகன் இட்லிக்கடை வழியாக தொடங்கிய நடை, டோசையில் ஒரு முறை நின்றிருந்தது. கோலி வடாபாவில் ஒரு முறை நின்றிருந்தது. முருகன் இட்லிக்கடையில் சிற்றுண்டி என்பது ஏற்கனவே முடிவுசெய்யப்பட்டுவிட்டதால் முன்பசியை மட்டும் ஒரு பனீர் டிக்கா தோசையிலும், சீஸ் வடாபாவிலும் தணித்திருந்தேன்.

வழக்கமான எலியாட்ஸ் கடற்கரைக் கூட்டம். பணக்காரப் பயபுள்ளைகள் பீட்சாவிலும், பர்கரிலும், விலை மிகுந்த சிகரெட்டுகளிலும் திளைத்திருக்க, நான் அன்று செலவான/செலவாகப் போகும் தொகையைக் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தேன். கால் தன்போக்கில் மீன் விற்பவர்களையும், ”அண்ணே இந்த ஒரு ஸ்டிக்கர் அட்டை மட்டும் வாங்கிக்கோங்கண்ணே” என்று கெஞ்சிய சிறுவர்களையும், புல்லாங்குழல் வாசித்து விற்பவரையும் கடந்து சாலையில் ஊர்ந்தது.

ப்யூப்பிலின் அருகே இருந்த வறுவல் கடை சுண்டியிழுத்தது. முருகன் இட்லிக்கடையின் பொங்கலும், தோசையும், பொடி இட்லியும் கண்முன் வந்து போனதால் சாலையைக் கடந்து நடைபாதையினூடே கடல் நோக்கி நடக்கத் தொடங்கினேன். மணி இரவு ஒன்பதரையைத் தொட்டுவிட்டபடியால் கடற்கரையில் பெரிதாய்க் கூட்டமில்லை. பஜ்ஜிக் கடைகளின் தகடுகளில் அமர்ந்து ஏகாந்தமாய்க் கொஞ்சிக்கொண்டிருந்தனர் காதலர். மணலில் செருப்புக்கால் பட்டு அழுந்தி அடுத்த அடி வைக்கையில் முன்வைத்த சுவடு வேகத்தடையைப் போன்ற வடிவம் பெற்று வந்தது வசீகரமாய் இருந்தது. தீப்பொறி பறக்க சோளத்தை வேகவைத்துக்கொண்டிருந்தனர் ஓரிருவர். தலப்பாக்கட்டி இருக்கும் பகுதியை நோக்கி வந்துவிட்டதை உணர்த்தியது சமீபமாய் அதிகரித்திருந்த இரைச்சல். அப்பகுதியை விட்டகன்று  கடலுக்கு மிக அருகில் கரையில் அமர்ந்தேன். சாலையை விட்டு இருநூறு மீட்டர் உள்ளிருக்கும் கடலுக்கருகில் செல்லச்செல்ல பிற ஓசைகள் அனைத்தும் மட்டுப்பட்டுக் கடலின் ஆர்ப்பரிப்பு மட்டுமே செவிகளில் ஒலிக்கத் தொடங்கியது.

மணலில் அமர்வது இதமாயிருந்தது. வேறொரு நாளாயிருப்பின் அலுவல் உடையில் மண் ஒட்டுவது குறித்து ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்திருப்பேன். அன்று அதைப் பற்றிய பிரக்ஞை இருக்கவில்லை. சத்தமாய் அலறாமல், மெலிதான ஓசையுடன் காதடைக்கும் காற்று வீசிக்கொண்டிருந்தது. முப்பது வயதையொத்த இரு ஆண்கள் கரையில் அமர்ந்து முதலீடுகள், பங்குச்சந்தை பற்றி விவாதித்துக்கொண்டிருக்க, பெண்கள் இருவர் கடலில் விளையாடிக்கொண்டிருந்தனர். கடலில் குழந்தைகள் விளையாடுவதற்கும், பெரியவர்கள் விளையாடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கவே செய்கின்றன. குழந்தைகள் கடலில் இருக்கும்போது, கடல் போல எல்லையற்றிருக்கவே விரும்புகின்றனர். உப்புத் தண்ணீர் வாய்க்குள் சென்றுவிடுவது பற்றியோ, கால்சட்டை முழுவதுமாய் நனைவதைப் பற்றியோ இம்மியளவும் கவலைப்படுவதில்லை. கடலில் கால் நனைக்கும் நேரம் அதிகமாக அதிகமாக உன்மத்தம் பெருகி, கால்களால் தண்ணீரை உதைத்து எதிரிலும், அருகிலும் இருப்பவர்களின் மீது தெளிக்கின்றனர். நேரம் செல்லச் செல்ல தாளகதி அதிகரிக்கிறது. கரையில் அமர்ந்து குழந்தைகளின் கால்கள் குதியாட்டம் போடுவதைப் பார்த்தால் கண் தானாகவே சொக்கிவிடும். பெரியவர்களிடம் அதையெல்லாம் காண முடிவதில்லை அவர்களுக்குக் கடலும், பங்குச்சந்தையும் ஒன்றுதான். ஆழம் பார்த்துப் பாதுகாப்பாக கால்களை மட்டும் மேலோட்டமாய் நனைத்துவிட்டு ஓடிவந்து விட வேண்டும். ஐந்திலிருந்து பத்து நிமிடம் வரை நின்றுவிட்டால் எப்படியோ அவர்களுக்கு மட்டும் திருப்தி வந்துவிடுகிறது. “சமையல் செஞ்சாச்சு”, “பசங்களுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சாச்சு” என்பது போல “கடலில் கால் நனைச்சாச்சு” என்பதும் மற்றுமொரு கடமையே அன்றி வேறில்லை.

கடலுக்கு மிக அருகில், ஆனால் நீர் நனைக்காத ஓரிடத்தில் அமர்ந்து ஈரப்பதத்தையும், அவ்வப்போது தெறிக்கும் நீர்த்திவலைகளையும் அனுபவிப்பதும் அலாதியாகத்தான் இருந்தது. காற்றின் வேகத்தில் முடி கலைந்து அங்குமிங்குமாய் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது. ஆட்டத்தை நிறுத்துவதற்காகத் தலையை மேலே தூக்கி, வானத்தைப் பார்த்தேன். வீடுகளின் சுற்றுப்புறச் சுவர்களில் பதிக்கப்பட்ட கண்ணாடித் துண்டுகளைப் போல் கேசம் குத்திட்டு நின்றது. பிரகாசமாய் இல்லாவிட்டாலும், நிலவு தன் இருப்பை மங்கலாய் உணர்த்தியது. மண்டையை அங்குமிங்குமாய்ச் சிலுப்பி, மேலும் கீழுமாய் அசைத்து தலைமுடியுடன் விளையாடிக்கொண்டிருந்தேன்.

கைப்பேசி அழைப்பு வருவதைப் போல் தோன்றியதால் திரையை ஒளிர்வித்தபோது ஏற்கனவே திறந்திருந்த ‘கானா’ செயலி மட்டுமே தோன்றியது. அழைப்பு எதுவும் வந்திருக்கவில்லை. கடைசியாகக் கேட்டிருந்த பாடல், ‘லைஃப் ஆஃப் ரா’மின் தெலுங்கு வடிவம். முதன்முறை கேட்டதிலிருந்து அக்கணம் வரை வியப்பொன்றையே விடையாய்த் தந்துகொண்டிருந்த பாடல். சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு வடிவத்தின் காணொலியை நண்பன் அனுப்பியிருந்ததையும், “அதே பாட்டுதானே?” என்ற மிதப்பில் கேட்கத் தொடங்கி, அப்பாடல் மீளுருவாக்கம் செய்யப்பட்டிருப்பதையறிந்து சிலிர்த்ததையும், ஒரே சூழலுக்கான ஒரே அர்த்தமுள்ள பாடல் அதே இசையமைப்பாளரால் வேறொரு பாணியில் இசையமைக்கப்பட முடியும் என்பதை அறிந்ததையும், தமிழில் பாடிய அதே பாடகர் தெலுங்கில் இன்னமும் அட்டகாசமாய்ப் பாடியிருப்பதை உணர்ந்ததையும் நினைத்துப் பார்த்தேன். அப்பாடல் குறித்த மனவெழுச்சி குறைவதற்கான எந்த்த் தடயமும் தென்படவேயில்லை.

வெறும் தாள வாத்தியத்துடன் தொடங்கிய பாடல், தூரத்திலிருந்த ஒரு அலையின் முன்னகர்வைத் துவக்கி வைத்தது. படிப்படியாய் முன்னேறி வந்த அலையைப் போலவே தாளத்துடன் கிடாரும் சேர்ந்து இசைக்கத் தொடங்கியிருந்தது. வயலினும் இசைக்கோர்ப்பில் கலந்த நேரத்தில் பல்வேறு சிறிய அலைகள் பல திசைகளிலிருந்து ஒன்றுபட்டு முன்னேறத் துவங்கின. வயலின் தன் பங்கை முடித்துக்கொண்டு பிரதீப் குமாரின் குரலுக்கு வழிவிடும் நேரத்தில், ஆரவாரமாய் ஆடி வந்த பெரிய அலை அப்பெண்களின் காலை நனைத்துத் திரும்பியது. ‘ஏதாரதுரயினா’ என்று பிரதீப் அடுத்த அலையைத் தூரத்திலிருந்து சுண்டியிழுக்கத் தொடங்கியிருந்தார். பல்லவி முடிந்து ராம் (சர்வானந்த்) ஆப்பிரிக்கப் பழங்குடியினருடன் எம்பிக்குதிக்கத் தொடங்கும் வேளையில், அலையும் இசைக்குப் பழகிவிட்டது. எம்பிக் குதித்து உற்சாகமாய் கரை நோக்கி மிதந்து வந்தது. நளின அசைவுகளுடன் வந்து காலைத் தொட்டு ஸ்பரிசிக்காமல், சற்றே கூடுதலான வாஞ்சையுடன் முட்டிவிட்டுச் சென்றது. பழங்குடியினருடன் ராம் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நேரத்தில் அமைதியாயிருந்த இசையும், அலையும் பின் ஒன்றிணைந்து செயலாற்றத் தொடங்கின. ‘உதயம் காகானி’ என்று தொடங்கிய பல்லவிக்கேற்ப அடுத்த அலை ஓடத் தொடங்கியது. நிதானமாய் உணர்வடங்கிய நிலையில் மெதுமெதுவாய் அடியெடுத்துவைத்த அலை, ‘காலிவாட்டம்லாகா’ என்று பிரதீப் உச்சம் தொடும் வேளையில் மறுபக்கத்திலிருந்து வந்த பிறிதொரு அலையில் மோதிச் சிதறியது. கண்கள் சற்றே குழம்பத் தொடங்கியிருந்தன. இசைக்கேற்றவாறு அலை ஆடியதா, அலைக்கேற்றவாறு இசையின் தாளம் மாறியதா என்று தெரியவில்லை. ‘நாவெண்டபடி நுவ்வெந்த’ என்று ராமின் அமைதி மகிழ்ச்சியாய்ப் பீறிட்டு எழும்போது அலைகள் முழுவதுமான நடன அரங்கேற்றத்தில் இறங்கியிருந்தன. வந்து பின்வாங்கிய அலையா, கால் நனைக்கப் போகும் அலையா, ஒரே திசையிலிருந்து வரும் பல அலைகளா, பல்வேறு திசைகளிலிருந்து வந்து இணைந்தவையா என வகைப்படுத்திக் கூற முடியாதபடி ஓராயிரம் நடன மாந்தர் சேர்ந்தாடுவதைப் போல் பிரம்மாண்டமாய் ஆடின அலைகள்.

உணர்ச்சி வேகத்தில் இரண்டு பல்லவிகளுக்கு ஆடி முடித்திருந்த அலைகள் ’தானேதானேனானினே’ எனும் தாலாட்டில் அமைதி கொள்ள ஆரம்பித்திருந்தன. கோவிந்த் வசந்தாவின் வயலின் களைத்திருந்த அலைகளை உறக்கத்தில் தள்ளின. பாடல் முடிந்தபோது அங்கு நடந்தேறிய நிகழ்வுகளுக்கான எவ்விதச் சுவடுகளுமின்றி, கள்ளத்தனமாய்க் கண்சிமிட்டின விண்மீன்கள்.

தொடர்ந்து வந்த ‘லைஃப் ஆஃப் ரா’மின் தமிழ் வடிவத்தின்போது உறங்கிவிட்டிருந்த அலைகளுக்குச் சற்றே ஓய்வு கொடுக்கலாம் என்றெண்ணிச் சுற்றிலும் கவனிக்கத் தொடங்கினேன். ‘கரை வந்த பிறகே’ என்ற கார்த்திக் நேத்தாவின் வரிகள் ஒலிக்கத் தொடங்கிய நேரத்தில் சோளக்கடையின் தீப்பொறிகளும் அகிம்சைக்குக் கட்டுப்பட்டவை போல ஒன்றன்பின் ஒன்றாக வரிசைகட்டிச்சென்றன. கடைசி ஓரிருவர் சோளம் வாங்கிக்கொண்டிருந்தனர். அத்துடன் வியாபாரம் முடிவடைவதைப் போல் தெரிந்ததால், நெருப்பை அணைத்தார் கடைக்கார அம்மா. ‘நாளை ஒர் அர்த்தம் காட்டுமே’ என்று பிரதீப்பும் கீழ் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தார். சட்டென “அக்கா இன்னும் ரெண்டு குடுங்க” என்று கடைசி வாடிக்கையாளர்கள் கேட்கவே மீண்டும் இயங்கத் தொடங்கியது அடுப்பு. பிரதீப்பும்தான். ‘வாழா என் வாழ்வை வாழவே’ என்று அவரது குரல் பயணிக்க, புதிதாகப் பற்ற வைத்ததால் கட்டுக்கடங்காமல் கிளம்பிய தீப்பொறிகளும் காற்றில் அடவு செய்துகொண்டிருந்தன. எனினும் அவற்றின் ஆட்டம் நிலைக்கவில்லை. பல்லவியின் முடிவில் இசையில் கலக்கும் பிரதீப்பின் குரல் போல இலக்கின்றி காற்றுடன் பயணிக்கத் தொடங்கின. அவ்விரண்டுடன் நிச்சயம் அன்றைய வியாபாரம் முடிவுக்கு வந்துவிட்டதென உணர்ந்தவராகக் கடைக்கார அம்மா நடையைக் கட்டினார்.

இப்போது எனக்கு வேறு வழி தெரிந்திருக்கவில்லை. ‘போதும் உறக்கம், எழுந்திருங்கள்’ என்று அலைகளை நோக்கியபோது அவை ஏற்கனவே எழுந்து மெதுவாய் நடனமாடத் தொடங்கியிருந்தது புலப்பட்டது. இரண்டாவது சரணத்தை அலைகளுடன் கழிக்கலாம் என்று முடிவு செய்தேன். எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. ‘திமிலேறிக் காளைமேல் தூங்கும் காகமாய்ப் பூமி மீது இருப்பேன்’ எனும் வரியில் பீறிட்டெழுந்த அலை, ‘புவி போகும் போக்கில் கை கோர்த்து நானும் நடப்பேன்’ என்ற வரியில் பிற அலைகளுடன் கைகோர்த்துத் தன் அகலத்தைக் கூட்டியிருந்தது. ‘ஏதோ ஏகம் எழுதே’வில் தன் அகலம் அனைத்திற்கான வலிமையையும் ஒன்றாய்த் திரட்டி மேலெழும்பி வேகமெடுத்த அலை, நூற்றுநாற்பதில் சீறிப்பாயும் வண்டி சிவப்பு விளக்கைக் கண்டவுடன் பம்முவதைப் போல ‘ஆரோ ஆரிராரிரோ’வில் அடங்கியது.

தொடர்ந்து வந்த ‘விழிகளின் அருகினில் வானம்’ பாடலுக்கும் இயைந்தாடியது அலை. ‘அலைகடலாய் இருந்த மனம் துளித்துளியாய் சிதறியதே’ என்று ரமேஷ் வினாயகம் தன் குழந்தை குரலில் லயிக்கும்போது மீண்டும் ஒருமுறை இரு அலைகள் மோதிச் சிதறின, கோலியும் ஜடேஜாவும் தவ்விக்குதித்து ‘செஸ்ட்பம்ப்’ (chest bump) செய்வதைப்போல. இப்போது பாடல் முழுவதையும் கேட்கப் பொறுமையின்றி அலைகளை ஆடவைப்பதற்கான அல்லது அமைதிப்படுத்துவதற்கான தாளங்களையும், வரிகளையும் தேடத் தொடங்கியிருந்தேன். ’இசையலையில் மிதந்தபடி இதயங்கள் நனையட்டும்’ என்று யுவன் பாடுகின்ற வேளையில் ஏரோபிக்ஸ் செய்யத் தொடங்கியிருந்தது ஆழி. அலைகள் ஒன்றின் மீது இன்னொன்று ஏறிச் மதில்சுவராய் நிமிர, அச்சுவர் தாண்டிக் கரணமடித்தது புதியதொரு அலை. ‘சிரிக்கின்ற போதிலும் நீ அழுகின்ற போதிலும்’ என்ற யுவனை மறித்து நண்பன் கைப்பேசியில் அழைத்தான். “வந்துட்டேண்டா” என்றபடி எழுந்தேன்.

மாலையில் தண்டையார்பேட்டையிலிருந்து கிளம்பியபோது இருந்த அழுத்தம் ஏதும் இருக்கவில்லை. சாப்பிட்ட தோசையும், வடாபாவும் கொடுத்திருக்க வேண்டிய நிறைவைக் காணவில்லை. உள்ளுடல் காலியாய் இருப்பதாகத் தோன்றியது. நன்றி சொல்லத் திரும்பியபோது கடல் ஆரவாரத்துடன் மூன்றாம் முறையாக ‘செஸ்ட்பம்ப்’ செய்து வழியனுப்பின. மேலே பார்த்தேன். ‘ஹோப் யூ ஹேட் ய நைஸ் டே’ என்று கண்சிமிட்டியது விண்மீன்.

ராமுக்குக் கரை வந்த பின் கடலைப் பிடித்தது. எனக்குக் கடற்கரைக்கு வந்த பிறகுதான் என்னையே பிடித்தது.

Wednesday, October 23, 2019

ஜெய் ஜெய் ஷிவ்ஷங்கரும் தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்தும்

நடனம், இசை, பாடல் குறித்த பல்வேறு கேள்விகளை எனக்குள் எழுப்பியது ‘ஜெய் ஜெய் ஷிவ்ஷங்கர்’


சமீபத்தில் வெளியான ’வார்’ எனும் பாலிவுட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜெய் ஜெய் ஷிவ்ஷங்கர்’ பாடலைப் பார்க்கும்போதெல்லாம் தவறாமல் ’திருமலை’ படத்தில் வரும் ‘தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து’ பாடலை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. முன்னதில் ஹ்ரித்திக் ரோஷனும், டைகர் ஷ்ரோஃபும் பட்டையைக் கிளப்புகிறார்கள் எனில், பின்னதில் விஜய்யும், ராகவா லாரன்ஸும் புழுதி பறக்க விடுகிறார்கள். சமூக வலைதளங்கள் இல்லாத தசாப்தத்திலேயே பட்டிதொட்டியெங்கும் ஒலி(ளி)த்த பாடல் ‘தாம் தக்க’.

தமிழில் சமீபத்தில் இரு நடனம் தெரிந்த நாயகர்கள் ஒன்றாகத் தோன்றித் தெறிக்க விட்ட பாடலைக் கேட்டதாக/பார்த்ததாக நினைவில்லை. ‘ஓப்பன் த டாஸ்மாக்’ (மான் கராத்தே) பாடலில் சிவகார்த்திகேயனும், அனிருத்தும் சேர்ந்து ஆடியதையோ, ‘சத்தியமா நீ எனக்குத் தேவையே இல்ல’ (எதிர்நீச்சல்) பாடலில் தனுஷும், சிவகார்த்திகேயனும் தோன்றுவதையோ வேண்டுமானால் ஒப்புக்குச் சேர்த்துக்கொள்ளலாம்.

கேட்டால் தாளம் போட வைக்கும் பல தமிழ்ப்பாடல்கள், பார்க்கும்போது அதே விளைவைக் கொடுப்பதில்லை. தேர்ந்த நடனக் கலைஞர் பலர் இங்கு கதாநாயகர்களாக இருப்பதில்லை என்பது ஒரு முக்கியமான காரணம். அனிருத்தின் பல பாடல்கள் கேட்பவரை நேர்மறை உந்துசக்தி கொடுத்து ஊக்குவிப்பவை. ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ (வேலைக்காரன்), ’ஆலுமா டோலுமா’ (வேதாளம்), ’தட்லாட்டம் தாங்க’ (பேட்ட) போன்றவை மிகச்சிறந்த உதாரணங்கள். ஆனால் ‘கருத்தவன்லாம்…’ தவிர்த்து, ஒலியில் கிடைக்கும் அதே உத்வேகம், ஒலி-ஒளியில் பார்க்கும்போது கிடைப்பதேயில்லை (ரஜினி, அஜித் ரசிகர்கள் வேண்டுமானால் எதிர்க்கலாம்).

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வந்த ‘அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல’ (வாரணம் ஆயிரம்), ‘வேணாம் மச்சான் வேணாம்’ (ஒரு கல் ஒரு கண்ணாடி) போன்றவை வெறும் காதல் தோல்விப் பாடல்களாக அமைந்துவிட்டபடியால், தாளகதி குறைவாக இருக்கும். எனவே அவை நடனத்திற்கு ஏற்றவாறு துள்ளலான பாடல்களாய் மாற வாய்ப்பின்றி அடைபடுகின்றன.

‘ஜெய் ஜெய் ஷிவ்ஷங்க’ரின் அதே திருவிழா அமைவுடன் வந்த சமீபத்திய பாடல் என்றால், ‘அடடடடா ஆரம்பமே’ (ஆரம்பம்) பாடலைச் சொல்ல முடியும். ஷங்கர் மஹாதேவனின் அனாயசமான குரலும், யுவன் சங்கர் ராஜாவின் சரியான தாள, ஒலித் தேர்வும், ஒரு பெரிய கூட்டமுமே ஆடும் அக்காட்சியமைப்பும் பாடலைப் பிரம்மாண்டமானதாகக் காட்டினால் கூட, அஜித்தின் நடனம் பாடலைச் சற்றே தளர்த்திவிடுவதில் ஆச்சரியமில்லை (அஜித் மெனக்கெட்டு நடனமாடியதாக அவரது வெறியர்கள் இப்பாடலையும், ‘ஆலுமா…’வையும் குறிப்பிடுவார்கள்). ஷங்கர் மஹாதேவனின் குரல் கடக்கும் உச்சத்தை அலேக்காகச் சாதிக்கும் சமகாலத்திய இருவர் பென்னி தயாளும், விஷால் டத்லானியும். அவர்கள் இருவரும் இணைந்து பாடியதுதான் ‘ஜெய் ஜெய் ஷிவ்ஷங்கர்’. இதே விஷால் டத்லானியும், அனிருத்தும் இணைந்து பாடிய ‘வீர விநாயகா வெற்றி விநாயகா’ (வேதாளம்) பாடலில் துரதிருஷ்டவசமாக அனிருத்தின் குரல் மேலோங்கி ஒலிக்கும்படியான ஒலிக்கோர்வையின் காரணத்தால், அப்பாடல் ஒலி வடிவத்தில் கூட, நிறைவான துள்ளலான உணர்வைக் கொடுப்பதில்லை.

பாலிவுட்டில் ப்ரீதம், விஷால்-ஷேகர் போன்றோரின் பாடல்கள் பெரும்பாலும் ஒரே வகையான இசையமைப்பைக் கொண்டிருந்தாலும், ’பெப்பி’யான பாடல்களைத் தொடர்ச்சியாகக் கொடுக்க முடிகிறது. ‘பலம் பிச்காரி’, ‘தில்லிவாலி கேர்ள்ஃப்ரெண்ட்’ (யே ஜவானி ஹை திவானி), ‘இந்தியா வாலே’ (ஹேப்பி நியூ இயர்) போன்றவை மிகச்சிறந்த உதாரணங்கள். ‘இந்தியா வாலே’வுக்கும், ‘அடடடடா ஆரம்பமே’வுக்குமான ஒப்புமைகள் பல. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் பின்னதற்கு அஜித் செய்வதை, முன்னதற்கு ஷாருக் கான், அபிஷேக் பச்சன், போமன் இரானி என ஒரு கூட்டமே செய்யும். தமிழ்த் திரையிசையில் ‘பெப்பி’ பாடல்களைக் கொடுக்கும்படியான இசையமைப்பாளர்கள் இன்றைய தேதிக்கு அனிருத்தும், சந்தோஷ் நாராயணனுமே. ‘மெட்ராஸ்’ படத்தின் ‘சென்ன வட சென்ன/எங்க ஊரு மெட்ராஸு’, ‘காகிதக் கப்பல்’ பாடல்களைக் கேட்டால் நான் சொல்வதை உணர்வீர்கள்.

சமகாலத் தமிழ்க் கதாநாயகர்களின் ஆகச் சிறந்த நடனக் கலைஞரான விஜய்க்குக் கூடச் சரியான தீனி போடும் பாடல்கள் அமைவதில்லை என்பது பெரும்குறை. ஏ.ஆர்.ரஹ்மான் – விஜய் கூட்டணியில் வந்த படங்களின் பாடல்களில் ஆங்காங்கே சேர்க்கப்படும் சில ’மெலடிக்’ விஷயங்கள் நடனத்திற்கான தேவையை வெகுவாகக் குறைக்கின்றன. ‘முன்னால் முன்னால் வா டா’ (அழகிய தமிழ்மகன்) விஜயின் நடனத்தைக் கிட்டத்தட்ட முழுதாக வெளிக்காட்டிய பாடல். எனினும் பாடலின் இடையே வரும் ‘மனது மனது வைத்தால்’ தொடங்கி ‘மாணவன் மனது வைத்தால்’ முடிய இருக்கும் காட்சிகள் நடனத்திற்கானவை அல்ல. ‘மதுரைக்குப் போகாதடி’ பாடல் தாளகதி குறைவாக வந்த, விஜய்க்கான ஒரு முகத்துதிப் பாடல். அதில் சொல்லிக்கொள்ளும் அளவிற்குப் பெரிதாய் ஒன்றுமில்லை (நடனத்தைப் பொருத்தமட்டில்). ‘ஆளப் போறான் தமிழ’னிலும் (மெர்சல்), ‘முன்னால் முன்னா’லில் இருக்கும் ஒரு எளிதான ஒற்றுமை, பாடலின் இடையில் வரும் உபகாட்சிகளும், உபகதைகளும்.’சர்க்கார்’ படத்தின் ‘டாப்பு டக்கரு’ பாடலின் மீது இசை வெளியீட்டு விழாவிற்குப் பின் பெரிய ஆர்வம் இருந்தது எனக்கு. எவ்விதமான குழைவும், இழைவுமின்றித் துரித தாளத்தில் ‘ஃபுட் டேப்பிங்’காகச் செல்லக் கூடிய பாடல் அது. மோஹித் சவுஹானின் குரலும், தமிழ் உச்சரிப்பும் (தமிழ் உணர்வாளர்கள் தயவு செய்து என் மீது பாய வேண்டாம். இது வட-தென் மொழிகள் குறித்து எழுதப்படும் பதிவல்ல) சேர்ந்து பாடலின் எதிர்பார்ப்பைக் கூட்டியது. படத்தில் அப்பாடல் வரக்கூடிய காட்சி எனக்குப் பெரிய ஏமாற்றத்தைத் தந்தது. சண்டைக் காட்சியும், பாடலும் சேர்ந்து வேறு பரிணாமத்தைக் கொடுத்தன என்றாலுமே, விஜய்யின் நடனத்தைப் பயன்படுத்தவில்லையே என்ற ஆதங்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. அதே படத்தில் இடம்பெறும் ‘சி.இ.ஓ. இன் த ஹவுஸ்’ பாடல் அவ்வகையில் இன்ப அதிர்ச்சி. அதிரடியான நடன நகர்வுகளைக் கிட்டத்தட்ட பாடல் முழுவதுமாகக் கொடுத்த பாடல்.

ஆனால் விஜய்யைப் பற்றிப் பேசும்போது, ‘போக்கிரி பொங்கல்’ (போக்கிரி) பற்றிக் குறிப்பிடாமல் கடந்துவிட முடியாது. மணிசர்மாவின் அனல் பறக்கும் இசையில் வெளிவந்து சக்கை போடு போட்ட பாடல். ஒரு கை காலரிலும், மற்றொரு கை வயிற்றுப்பகுதியிலும் இருக்கும்படி விஜய் போன்றே ஆட முயன்று, பள்ளி ஆண்டுவிழாவில் அசிங்கப்பட்ட பல மாணவர்களைப் பார்த்த ஞாபகம் பசுமையாய்ப் பதிந்திருக்கிறது. ஆனால் அப்பாடலில் கூட (ரஜினியின் சாயலிலேயே) சமூகக் கருத்தைத் திணிப்பதற்கான காட்சிகளும், விஜய் பத்துப் பேரைப் பாடலுக்கிடையிலேயே போட்டுப் புரட்டி எடுப்பதும் நடனத்திற்கான வாய்ப்புகளைச் சுருக்கிவிட்டன. பாடலின் இறுதியில் பிரபுதேவாவும், விஜய்யும் ஆடும் ஆட்டம் பாடல் முழுக்க இடம்பெற்றிருந்தால் மற்றொரு ‘தாம் தக்க தீம் தக்க’வாக அமைந்திருக்கும்.

கோலிவுட்டில் இருக்கும் மற்றொரு குறை பாடகர்கள். ஷங்கர் மஹாதேவனின் குரலிலிருக்கும் ஆற்றல் கார்த்திக், நரேஷ் ஐயர் போன்றோரிடம் இருந்தால் கூட, ஒரு ‘படிச்சுப் பார்த்தேன் ஏறவில்ல’வைக் (பொல்லாதவன்) கார்த்திக்காலோ நரேஷ் ஐயராலோ தூக்கி நிறுத்த முடியாது. கார்த்திக்கின் எனர்ஜி வெளிப்படும் பாடல்களில் ‘எனக்கொரு கேர்ள்ஃப்ஃப்ர்ண்ட் வேண்டுமடா’ (பாய்ஸ்) மட்டுமே ‘பெப்பி’ வகையில் சேரும் என்பது என் எண்ணம். ’உசுரே போகுதே’ (ராவணன்), ‘மழை வரப் போகுதே’ (என்னை அறிந்தால்) போன்றவை ஏக்கம், காதல் போன்ற உணர்வுகளின் வெளிப்பாடாக வரும் பாடல்களாதலால் அவற்றைத் தாளம் போட வைக்கும் பாடல்கள் என வகைப்படுத்த முடியாது. நரேஷ் ஐயரும், பென்னி தயாளும் இணைந்து பாடிய ‘ஏத்தி ஏத்தி ஏத்தி’யில் (வாரணம் ஆயிரம்) பென்னி தயாளின் குரல்தால் உச்சங்களில் ஓங்கி ஒலிக்கும்.

தனிப்பட்ட வகையில் அந்தோணி தாசனும், வேல்முருகனும் ஒழுங்காகப் பயன்படுத்தப்படாத இரு பாடகர்கள் என்ற வகையில் எனக்குப் பெரும் மனக்குறை உண்டு. விஜய் போன்ற ஒரு நடிகரின் ‘இண்ட்ரோ’ பாடலைப் பாடுவதற்கான அனைத்துக் குணாதிசயங்களும் இருவரது குரலிலும் உண்டு. இருவருமே எஸ்.பி.பாலசுப்ரமண்யம் போலவே தமிழ் உச்சரிப்பை அழுத்தம், திருத்தமாகப் பாடல்களில் கொண்டுவருபவர்கள். கைலாஷ் கேர், ஷங்கர் மஹாதேவனின் குரல்களில் இருக்கும் தெறிப்பு இவர்களிடமும் உண்டு. ஆனால் நாட்டுப்புறத் தொனியில் இருக்கும் பாடல்களுக்கான குரலாக வேல்முருகனும், ஹிப்ஹாப் ஆதி மற்றும் அனிருத்தின் ஆஸ்தான பாடகர் கோஷ்டியில் ஒருவராக அந்தோணி தாசனும் சுருங்கிவிட்டது சோகத்திலும் சோகம். தனியிசையில் பெரும் முத்திரை பதித்து வரும் அந்தோணி தாசனின் குரல் தமிழ்த் திரையுலகில் நிச்சயமாக பல்வேறு வகையான பாடல்களில் ஒலிக்க வேண்டிய முக்கியமான குரல். வேல்முருகனைப் பொறுத்தவரை அவரை இதுவரைச் சிறப்பாகப் பயன்படுத்திய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மட்டுமே. அதுவும் ஒரே பாடலின் வெவ்வேறு ‘ட்யூன்’களாக ஒலிக்கும் ‘ஒத்த சொல்லால’ (ஆடுகளம்), ‘அடி கருப்பு நெறத்தழகி’ (கொம்பன்), ‘சண்டாளி’ (செம) போன்ற பாடல்களில் மட்டுமே வேல்முருகனின் முத்திரையைக் காண முடியும். ‘சத்தியமா நீ எனக்குத் தேவையே இல்ல’வை வேல்முருகனின் குரலின்றி நிச்சயம் கேட்கவே முடியாது. அதேபோல ‘என்னத்தச் சொல்ல இன்னும் என்னத்தச் சொல்ல’வில் (என்றென்றும் புன்னகை; ஹாரிஸ் ஜெயராஜ் இசை) வரும் வேல்முருகனின் குரல் கார்த்திக், ஹரிசரணின் குரல்களைத் தாண்டிச் சுண்டியிழுப்பதை எளிதாக உணர முடியும்.

இசை பற்றியதான விரிவாக இப்பதிவு மாறிவிட்டதெனினும், இரு நாயகர்கள் நடிக்கும் தமிழ்ப்படங்கள் எப்படி இருக்கின்றன என்பதையும் உற்று நோக்க வேண்டும். ஒருவரை உயர்த்திப் பிடிக்கும் நோக்கில் எடுக்கப்படும், கதாநாயகப் பிம்பம் கூரையைப் பிய்க்கும் படங்களின் இரண்டாம் நாயகராகப் பெயரளவில் சேர்க்கப்படும் பாத்திரங்கள் நிறைந்த படங்களே மிகுதி. அவ்வகையில் ஆர்யாவைப் பற்றிப் பேசாமல் எப்ப்டி? ‘ஆரம்பம்’, ‘காப்பான்’ என இரண்டு படங்களிலும் கிட்டத்தட்ட ‘டம்மி’யான ரோல். மேலும் அஜித்தும், ஆர்யாவும் சேர்ந்து ஆடினால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்வது மனித மூளைக்கு அப்பாற்பட்டது. ’நண்பன்’, ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்று பல ’மல்டிஸ்டார்ரர்’ படங்கள் எதற்கென்றே தெரியாமல்தான் பெரும்பாலும் பாத்திரங்களைச் சேர்க்கின்றன. புரமோஷனில் உதவுவதற்காக என்று வைத்துக்கொள்ளலாம். எனவே வருங்காலங்களில் இன்னொரு ‘தாம் தக்க தீம் தக்க’ கூடிய சீக்கிரம் வரப்போவதில்லை என்பது உறுதி. அதுவரை. ‘ஜெய் ஜெய் ஷிவ்ஷங்கர்’, ‘தாம் தக்க…’ ஆகிய இருவர் நடனப் பாடல்களை வாய்பிளந்து பார்க்கலாம்.

Tuesday, October 8, 2019

உணவுப் (பை)பத்தியம்

1
பாலும் பழமும் காலையுணவென்றேன்
விசித்திரமாய்ப் பார்த்தனர்
ட்ரை ஃப்ரூட்ஸ் வித் டைல்யூட்டட் யோகர்ட் என்றேன்
பெருமிதத்தில் பூரித்தனர்

2
மொழியும் செரிமானமும் ஒன்று
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம்
திணிப்புஉவமையாய் உண்மையாய் நடக்கிறது
உணவுப் பத்தியத்தில்!
மறுத்தால்
அப்பாவுக்கு வருத்தம்முகம் வாடுகிறார்
அம்மாவுக்குப் பதற்றம்ஆசை காட்டுகிறார்

பையனுக்கு வியாதியா?
ரொம்ப மெலிஞ்சிட்டியேப்பா!
கொஞ்சம் இட்லி சாப்பிடு
பக்கத்து வீட்டு மாமியின் விருந்தோம்பல்
தோசை சட்னி
வடை சாம்பார்
சாதம் குழம்பு சகிதம்
தொண்டைக்குழியில் தோட்டாவாய் இறங்குகின்றன
உணவு வன்முறையின் அப்பட்டம்

3
ஆசை ஆசையாய் இலை நோக்கும் பந்தி வீரர்
அங்குமிங்கும் அலையும் பந்தி பரிமாறுபவர்
மாப்பிள்ளை பெண் முகம் பார்க்காது
கண் துஞ்சாது
பசி மட்டும் நோக்கி
நேராகப் பந்திக்கு விரையும் சாப்பாட்டுப் பிரியர்கள்
செல்ஃபியை ஸ்டார்ட்டராக உருமாற்றும் இளைஞர் குழாம்
திருமணப் பந்தியில் அரங்கேறுகிறது ஒரு கேயாஸ் தியரி
பட்டாம்பூச்சி விளைவாய் சங்கிலித் தொடராய்
ஒரு இலையில் தொடங்கிப் பரவுகிறது
பனீர் பட்டர் மசாலா

கலத்திற்கு மேல் கரம் பாலமாய் நிற்கிறது
வேண்டாம் என்கிறேன்
முறைக்கிறார் பெண் வீட்டுக்காரர்
விலகுகிறது கை
கொட்டப்படுகிறது பனீர்பின்
பெரியப்பாவின் கிண்டலுக்கும்
மாமாவின் திட்டுக்கும்
அம்மாவின் அறிவுரைக்கும்
அப்பாவின் நினைவூட்டலுக்குமென
முறையே நிறைகின்றன வெவ்வேறு பதார்த்தங்கள்

வீணாக்க மனதில்லை
வயிற்றுக்குள்ளும் அது வீணாய்த்தான் போகும்
கையைப் பிசைந்து இலையில் கோலமிடுகிறேன்
விளையாட்டு வினையாகிறது பந்தி கலையும்போது
இலை எடுக்கும் அக்காக்கள் நோக்குகின்றனர் பரிதாபமாய்
குறிப்பறிந்து எறிகிறேன் வயிற்றுக்குள்
உணவுக் கவளம் எனும் குப்பையை